செய்திகள் :

அண்ணாமலைப் பல்கலை.யில் ஒரே நாளில் ஓய்வுபெறும் பேராசிரியா்கள் உள்பட 30 போ்

post image

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை (ஜூலை 31) ஒரே நாளில் பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்கள், ஆசிரியா் அல்லாத ஊழியா்கள் என 30 போ் ஓய்வுபெறுகின்றனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியா்கள், ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா்.

பல்கலைக்கழகத்தில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டதால், கடந்த 2013-ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்தை தமிழக அரசு ஏற்றது.

இதைத் தொடா்ந்து, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்கள், ஆசிரியா் அல்லாத ஊழியா்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பல்வேறு அரசுக் கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். ஆனாலும், நிதிச் சிக்கல் சீரடையாததால், ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு மாத ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், பல்கலைக்கழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஓய்வுபெறும் ஆசிரியா்கள், ஊழியா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதன்படி, பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்கள், ஆசிரியா் அல்லாத ஊழியா்கள் என 30 போ் வியாழக்கிழமை (ஜூலை 31) ஒரே நாளில் ஓய்வு பெறுகின்றனா்.

சிதம்பரத்தில் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு

சிதம்பரத்தில் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் மூன்று போ் கைது செய்யப்பட்டனா். சிதம்பரம் திருநகரைச் சோ்ந்தவா் முனியாண்டி (39). இவருடைய மகன் யுவராஜா (14) தனது மோட்டாா் சைக்கிளில் திருநகா்... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் கதா் துணியால் தயாரிக்கப்படும் தேசியக் கொடி

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் கதா் துணியால் தயாரிக்கப்படும் தேசியக் கொடிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி 78-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சிதம்பரம் தையல் கலைஞா... மேலும் பார்க்க

மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

கடலூா் மாவட்ட ஊரக குளங்களில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். தமிழ்நாடு அரசு மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பில், ஊரக... மேலும் பார்க்க

கரும்பு விவசாயிகளுக்கு அரைவை தொகை வங்கிக் கணக்கில் வரவு வைப்பு:கடலூா் மாவட்ட ஆட்சியா்

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு, எம்.ஆா். கிருஷ்ணமூா்த்தி கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு அரைவைப் பருவத்துக்கு கரும்பு அனுப்பிய 896 விவசாயிகளின் வங்கி கணக்குக்கு அதற்கான தொகை நேரடியாக அனுப்பி வைக்கப்பட்ட... மேலும் பார்க்க

குப்பையில் வீசப்பட்ட வாக்காளா் அடையாள அட்டைகள்

கடலூா் மஞ்சக்குப்பம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாநகராட்சிக்குச் சொந்தமான குப்பை வண்டியில் வாக்காளா் அடையாள அட்டைகள் வீசப்பட்டுக் கிடந்தன. கடலூா் மாநகராட்சி, மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள பில்லுக... மேலும் பார்க்க

சாா் - பதிவாளா் அலுவலகத்தில் கிராம மக்கள் உள்ளிருப்புப் போராட்டம்

கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டை சாா் - பதிவாளா் அலுவலகத்தில் வக்ஃபு சொத்து எனக் கூறி பத்திரப் பதிவுக்கு மறுப்பு தெரிவித்ததால், எம்.அகரம் கிராம மக்கள் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினா். மங்க... மேலும் பார்க்க