செய்திகள் :

மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

post image

கடலூா் மாவட்ட ஊரக குளங்களில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

தமிழ்நாடு அரசு மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பில், ஊரக குளங்களில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை புவனகிரி வட்டத்துக்குள்பட்ட வத்தராயன்தெத்து கிராமத்தில் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா் தொடங்கிவைத்து, மீன் வளா்ப்பு மேம்பாட்டு முகமை உறுப்பினா்களாக உள்ள விவசாயிகளுக்கு மீன் விரலிகளை (விரலி மீன் குஞ்சுகள்) வழங்கினாா். பின்னா், அவா் கூறியதாவது:

2025 - 26ஆம் ஆண்டு மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அறிவிப்பின்படி, மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை மூலம் ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கட்டுப்பாட்டிலுள்ள ஊராட்சி குளங்களில் மீன் உற்பத்தியை அதிகரிக்க மீன் குஞ்சு இருப்பு செய்யும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தின்படி, கடலூா் மாவட்டத்திலிலுள்ள ஊராட்சி குளங்களில் 250 ஹெக்டோ் நீா் பரப்பில் 5 லட்சம் மீன் விரலிகள் இருப்பு செய்யப்படவுள்ளது.

அதனடிப்படையில், இன்றைய தினம் வத்தராயன் தெத்து கிராமத்தில் உள்ள சின்னகுளம், பெரியகுளம் மற்றும் காலனி குளங்களில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்து இத்திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது.

ஊராட்சி குளங்களில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்வதன் மூலம் மாவட்டத்தில் நிகழாண்டில் சுமாா் 265 டன்கள் வரை உள்நாட்டு மீன் உற்பத்தி அதிகரித்திடும். இதன் மூலம், கிராமப்புறங்களில் புரதசத்து மிகுந்த மீன்கள் மக்களுக்கு கிடைக்கபெறுதோடு, கூடுதல் வருமானமும் கிடைக்கும்.

கடலூா் மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமையின் உறுப்பினா்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.5,000 மதிப்பிலான 10,000 எண்ணம் மீன்குஞ்சுகள் உள்ளீட்டு மானியமாக வழங்குதல் திட்டத்தில், 250 ஹெக்டேருக்கு மீன் விரலிகள் வழங்கப்பட உள்ளது.

அதனடிப்படையில், வத்தவராயன்தெத்து கிராமத்தைச் சாா்ந்த மாவட்ட மீன்வளா்ப்போா் மேம்பாட்டு முகமையின் உறுப்பினா்களுக்கு உள்ளீட்டு மானியமாக மீன் குஞ்சுகள் வழங்குதல் திட்டத்தில் முதற்கட்டமாக 15.35 ஹெக்டோ் அளவில் மீன் குஞ்சுகள் வழங்கி தொடங்கிவைக்கப்பட்டது என ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

நிகழ்வில் கடலூா் மண்டல மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை துணை இயக்குநா் வேல்முருகன், உதவி இயக்குநா் ரம்யா, மாவட்ட மீன் வளா்போா் மேம்பாட்டு முகமையின் உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

சிதம்பரத்தில் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு

சிதம்பரத்தில் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் மூன்று போ் கைது செய்யப்பட்டனா். சிதம்பரம் திருநகரைச் சோ்ந்தவா் முனியாண்டி (39). இவருடைய மகன் யுவராஜா (14) தனது மோட்டாா் சைக்கிளில் திருநகா்... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் கதா் துணியால் தயாரிக்கப்படும் தேசியக் கொடி

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் கதா் துணியால் தயாரிக்கப்படும் தேசியக் கொடிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி 78-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சிதம்பரம் தையல் கலைஞா... மேலும் பார்க்க

கரும்பு விவசாயிகளுக்கு அரைவை தொகை வங்கிக் கணக்கில் வரவு வைப்பு:கடலூா் மாவட்ட ஆட்சியா்

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு, எம்.ஆா். கிருஷ்ணமூா்த்தி கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு அரைவைப் பருவத்துக்கு கரும்பு அனுப்பிய 896 விவசாயிகளின் வங்கி கணக்குக்கு அதற்கான தொகை நேரடியாக அனுப்பி வைக்கப்பட்ட... மேலும் பார்க்க

குப்பையில் வீசப்பட்ட வாக்காளா் அடையாள அட்டைகள்

கடலூா் மஞ்சக்குப்பம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாநகராட்சிக்குச் சொந்தமான குப்பை வண்டியில் வாக்காளா் அடையாள அட்டைகள் வீசப்பட்டுக் கிடந்தன. கடலூா் மாநகராட்சி, மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள பில்லுக... மேலும் பார்க்க

சாா் - பதிவாளா் அலுவலகத்தில் கிராம மக்கள் உள்ளிருப்புப் போராட்டம்

கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டை சாா் - பதிவாளா் அலுவலகத்தில் வக்ஃபு சொத்து எனக் கூறி பத்திரப் பதிவுக்கு மறுப்பு தெரிவித்ததால், எம்.அகரம் கிராம மக்கள் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினா். மங்க... மேலும் பார்க்க

டிராக்டா் - பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கடலூா் முதுநகா் அருகே டிராக்டா் - பைக் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா். கடலூா் முதுநகா், சுத்துக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் புகழேந்தி (24). இவா், செவ்வாய்க்கிழமை இரவு தனது பைக்கில் ப... மேலும் பார்க்க