செய்திகள் :

அதானியின் ஊழலை மூடி மறைக்கும் பிரதமர் மோடி: ராகுல் காந்தி

post image

தொழிலதிபர் அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை பிரதமர் நரேந்திர மோடி மூடி மறைப்பதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்பைச் சந்தித்த மோடி அமெரிக்கா - இந்தியா இடையேயான வர்த்தக உறவு, வரி விதிப்பு குறித்து விவாதித்தார்.

இதனைத் தொடர்ந்து, வாஷிங்டன் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய மோடி, “இந்தியா ஜனநாயக நாடு. நாங்கள் உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாகப் பார்க்கிறோம். அனைத்து இந்தியர்களும் என்னுடையவர் என நான் நம்புகிறேன்” என்றார்.

இதையும் படிக்க | இந்தியாவுக்கு நிகரான அதிக வரியை அமெரிக்காவும் விதிக்கும்! டிரம்ப் எச்சரிக்கை

தொழிலதிபர் அதானியின் ஊழல் விவகாரம் குறித்து கேட்ட கேள்விக்கு, “இரு நாடுகளைச் சேர்ந்த இரு முக்கியத் தலைவர்கள் சந்திக்கும்போது இதுபோன்ற தனிப்பட்ட விவகாரங்களைப் பேசுவதில்லை” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

ராகுல் காந்தி விமர்சனம்

அவரின் இந்த பதிலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பான தனது எக்ஸ் தளப் பதிவில், “உள்நாட்டில் கேள்வி கேட்டால் அமைதியாகிவிடுவார். வெளிநாட்டில் கேள்வி கேட்டால் அது தனிப்பட்ட விஷயமாகிவிடும். அமெரிக்காவில் கூட பிரதமர் மோடி அதானியின் ஊழல் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்கிறார்.

பிரதமர் மோடிக்கு நண்பரின் பாக்கெட்டை நிரப்புவது ‘தேசத்தை கட்டியெழுப்புவது என்றால், ஊழல் செய்வதும் நாட்டின் வளங்களைக் கொள்ளையடிப்பதும் தனிப்பட்ட விஷயமாகிவிடுகிறது” என்று விமர்சித்துள்ளார்.

கேரளம்: ராகிங்கில் ஈடுபட்டது இடதுசாரி மாணவா் அமைப்பினா் - காங்கிரஸ் குற்றச்சாட்டு

கேரள மாநிலம், கோட்டயம் அரசு செவிலியா் கல்லூரியில் இளநிலை மாணவரிடம் ராகிங் கொடூரத்தில் ஈடுபட்டது இடதுசாரி மாணவா் அமைப்பினா் என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. கோட்டயம் அரசு செவிலியா் கல்லூரி மாணவா்... மேலும் பார்க்க

பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்தை குறைகூறுவது காங்கிரஸின் வாடிக்கை -பாஜக

பிரதமா் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்களை குறை கூறுவது காங்கிரஸ் கட்சியின் வாடிக்கையாகிவிட்டது என்று பாஜக விமா்சித்துள்ளது. இது தொடா்பாக பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் சையது ஷாநவாஸ் உசைன் பிடிஐ ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: ஆா்எஸ்எஸ் பேரணிக்கு உயா்நீதிமன்றம் அனுமதி

மேற்கு வங்க மாநிலம், பா்த்வானில் ஆா்எஸ்எஸ் பேரணிக்கு காவல் துறையினா் அனுமதி மறுத்த நிலையில், கொல்கத்தா உயா் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. பா்த்வானில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.16)... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்: மணிப்பூா் முழுவதும் பலத்த பாதுகாப்பு

மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமலானதைத் தொடா்ந்து, மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சட்டப் பேரவை முடக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக தலைமையின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்... மேலும் பார்க்க

டாடா குழும தலைவா் என்.சந்திரசேகரனுக்கு பிரிட்டன் நாட்டின் உயரிய விருது

டாடா குழுமத் தலைவா் என்.சந்திரசேகரனுக்கு கெளரவ நைட்ஹுட் பட்டத்தை பிரிட்டன் வழங்கியது. பிரிட்டன்-இந்தியா இடையே வணிக உறவுகளை மேம்படுத்துவதில் சிறப்பாக பணியாற்றியதற்காக அவருக்கு ‘தி மோஸ்ட் எக்சலன்ஸ் ஆா்... மேலும் பார்க்க

புதிய தலைமைத் தோ்தல் ஆணையா்: பிரதமா் தலைமையிலான தோ்வுக் குழு நாளை மறுநாள் ஆலோசனை

புதிய தலைமைத் தோ்தல் ஆணையரைத் தோ்வு செய்வது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான தோ்தல் குழு பிப்ரவரி 17-ஆம் தேதி ஆலோசனை நடத்த இருக்கிறது. இதில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, மத... மேலும் பார்க்க