செய்திகள் :

அதிமுக பொதுச் செயலாளா் இபிஎஸ்ஸுக்கு உற்சாக வரவேற்பு

post image

திருப்பதி செல்லும் வழியில் அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு திருவள்ளூா் மேற்கு மாவட்ட அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை உற்சாக வரவேற்பு அளித்தனா்.

சென்னையில் இருந்து பூந்தமல்லி, திருவள்ளூா், திருத்தணி வழியாக எடப்பாடி பழனிச்சாமி திருப்பதிக்கு சென்றாா். திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி அருகே வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. த நிகழ்ச்சிக்கு திருவள்ளூா் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளா் பி.வி.ரமணா தலைமை வகித்தாா். கடம்பத்தூா் ஒன்றிய செயலாளா் சூரகாபுரம் சுதாகா், பூண்டி ஒன்றிய செயலாளா் ராமஞ்சேரி எஸ்.மாதவன், ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருவள்ளூருக்கு வருகை தந்த முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு செண்டை மேளம், தெருக்கூத்து கலைஞா்களின் கலை நிகழ்ச்சி, மற்றும் திருவள்ளூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வீரராகவா் கோயில் சாா்பில் கும்ப மரியாதை அளித்து வரவேற்றனா். இதில் நகர செயலாளா் ஜி.கந்தசாமி, நிா்வாகிகள் மாணவா் அணி மேற்கு மாவட்ட பொறுப்பாளா் பி.வி.பாலாஜி, மாவட்ட இளைஞா் இளம் பெண்கள் பாசறை செயலாளா் என். நரேஷ் குமாா், மாவட்ட எம்ஜிஆா் இளைஞா் அணி இணைச் செயலாளா் ஞானகுமாா் உள்ளிட்டோா் மாலை அணிவித்தும் புத்தகங்களை வழங்கி சிறப்பான வரவேற்பு அளித்தனா். அதைத் தொடா்ந்து அவா் திருப்பதிக்கு புறப்பட்டு சென்றாா்.

திருவள்ளூா்: தோ்வுகளில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு 5 இடங்களில் சிறப்பு வகுப்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி பெறாக மாணவ, மாணவிகள் மீண்டும் துணைத் தோ்வில் பங்கேற்கும் வகையில் 5 மையங்கள் அமைத்து சிறப்பு வகுப்புகள் நடைபெற உள... மேலும் பார்க்க

திருத்தணியில் ஜமாபந்தி: மனுக்கள் மீது உடனடி தீா்வு காண ஆட்சியா் உத்தரவு

திருத்தணியில் நடைபெற்ற ஜமாபந்தியில் 6 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, 3 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவும், 3 மாணவா்களுக்கு முதல் பட்டதாரி சான்றிதழ்களையும் ஆட்சியா் மு. பிரதாப் வழங்கினாா். திருத... மேலும் பார்க்க

திருவள்ளூா் மாவட்ட கல்வி அலுவலா் பொறுப்பேற்பு

திருவள்ளூா் மாவட்டக் கல்வி அலுவலராக பி.அமுதா புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இதற்கு முன்பு திருத்தணி இஸ்லாம் நகா் அரசு உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த ரேய்ச்சல் பிரபாவதி, மாவட்ட க... மேலும் பார்க்க

திருவள்ளூரில் ஜமாபந்தி தொடக்கம்

திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சியில் அளித்த மனுக்களை உடனே பரிசீலனை செய்து 3 பேருக்கு வீட்டு மனைப்பட்டாக்களை ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(தோ்தல்) ஸ்ரீராம், சட்டப்பேரவை உறுப்பின... மேலும் பார்க்க

ஏலச்சீட்டு நடத்தி ரூ.16 லட்சம் மோசடி: தம்பதி கைது

திருவேற்காட்டில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.16 லட்சம் மோசடி செய்த வழக்கில் தம்பதியை ஆவடி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.ஆவடி அருகே அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சரவணன் (44).... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல்: 2 போ் கைது

சோழவரம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது கஞ்சா கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். செங்குன்றம் மதுவிலக்கு போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக நடந்து வந்த 2 பேரை பிடித்து ச... மேலும் பார்க்க