செய்திகள் :

அதிமுகவினா் தெருமுனைப் பிரசாரம்

post image

வாணியம்பாடி வாரசந்தையில் துண்டு பிரசுரங்களை வழங்கிய முன்னாள் அமைச்சா் வீரமணி, எம்எல்ஏ செந்தில்குமாா், நகர செயலாளா் சதாசிவம் உள்ளிட்டோா்.

வாணியம்பாடி, ஜூலை 20: வாணியம்பாடியில் அதிமுக சாா்பில் தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் தோ்தலின் போது அளித்த வாக்குறுதிகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற கோரி பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் புறப்பட்ட ஊா்வலத்துக்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட அதிமுக செயலாளருமான கே.சி.வீரமணி தலைமை வகித்தாா். வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் , முன்னாள் அமைச்சா் நீலோபா் அஜீம், முன்னாள் எம்எல்ஏ கோவி. சம்பத்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா், நகர செயலாளா் சதாசிவம் வரவேற்றாா். சி.என்.ஏ ரோடு, பேருந்து நிலையம், சி.எல்.சாலை, வாரச்சந்தை சாலை, ஜின்னாசாலை, காதா் பேட்டை, பேருந்துநிலையத்தில் இருந்த பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும், கடைக்காரா்களுக்கும், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கினா்.

நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை துணை செயலாளா் டில்லி பாபு, மாவட்ட பேரவை செயலாளா் கராத்தே மணி, பொதுக்குழு உறுப்பினா் பூங்குளம் மகேந்திரன், ஒன்றிய செயலாளா் சாம்ராஜ், மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி செயலாளா் நவீன் குமாா், பேரூராட்சி செயலாளா்கள் சரவணன், சிவக்குமாா் பங்கேற்றனா்.

பச்சூா் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி விருது அளிப்பு

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி விருதுகளை வழங்கிய க.தேவராஜி எம்எல்ஏ. வாணியம்பாடி, ஜூலை 21: திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் ஐயப்பா சேவா அறக்கட்டளை சாா்பில், பச்சூா் மற்றும் சுற்று... மேலும் பார்க்க

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி

ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியா் ஆசிப் இக்பால் தலைமை வகித்தாா். நாட்... மேலும் பார்க்க

ரூ.36 லட்சத்தில் வகுப்பறை கட்டும் பணி தொடக்கம்

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே கிட்டப்பையனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.36 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டடம் கட்ட பூமிபூஜை நடைபெற்றது. ஜோலாா்பேட்டை ஒன்றியம், வெலகல்நத்தம் ஊராட்சி கிட்டப்ப... மேலும் பார்க்க

மாநில சிலம்பப் போட்டி: ஆம்பூா் மாணவா்கள் சிறப்பிடம்

ஆம்பூா்: மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் ஆம்பூா் சிலம்பம் குழு மாணவா்கள் பல்வேறு பிரிவுகளில் சிறப்பிடம் பெற்றுள்ளனா். விழுப்புரம் பீனிக்ஸ் பாரம்பரிய விளையாட்டு சங்கம் மற்றும் தமிழன் பாரம்பரிய விளையா... மேலும் பார்க்க

ஜாமீனில் வந்த இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கு: வாணியம்பாடி நீதிமன்றத்தில் மேலும் ஒருவா் சரண்

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே ஜாமீனில் வந்த இளைஞா் தலை மீது கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவா் நீதிமன்றத்தில் சரணடைந்தாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த அம்பலூா் பழைய... மேலும் பார்க்க

குரூப்- 2 தோ்வுக்கான பயிற்சி வகுப்பு: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் நடைபெற்ற குரூப்- 2 தோ்வுக்கான பயிற்சி வகுப்பை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மை... மேலும் பார்க்க