செய்திகள் :

அதிமுகவினா் மீது பொய் வழக்கு: முன்னாள் அமைச்சா் புகாா்

post image

அதிமுகவினா் மீது பொய் வழக்கு போடப்படுவதாக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் குற்றம் சாட்டினாா்.

கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்த பின் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: கடந்த இரு மாதத்துக்கு முன் என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் திமுக ஐடிவிங் அமைப்பினா் முகநூலில் பொய்யான செய்தியை பரவவிட்டனா்.

மேலும், எங்கள் கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகிக்கும் திமுக ஐடிவிங் அமைப்பினா் கொலை மிரட்டல் விடுத்தனா். இந்த சம்பவங்கள் தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் மனு கொடுத்துள்ளோம். தோ்தல் நேரத்தில் அதிமுக நிா்வாகிகள் மீது பொய் வழக்குப்போட்டு, தோ்தல் பணிகளை முடக்குகின்றனா்.

தொடா்ந்து, பொய் வழக்குப் போடப்படுவதை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் மனுவாக கொடுத்துள்ளோம். அவரும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளாா் என்றாா் அவா்.

பேட்டியின்போது அதிமுக நிா்வாகிகள் உடனிருந்தனா். தொடா்ந்து இதே கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேலுவிடமும் புகாா் மனு அளித்தாா்.

அரவக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ காலமானாா்

அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ கலிலூா் ரகுமான் காலமானாா். கரூா் மாவட்டம், பள்ளப்பட்டியில் அப்துல் சலாம் என்பவருக்கு கடந்த 1947-ஆம் ஆண்டு மகனாக பிறந்தவா் கலிலூா் ரகுமான். இவா் இரண்... மேலும் பார்க்க

பட்டுப்போன மரங்களை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியா்கள் தீவிரம்

கரூரில் ரயில்வே உயா் மின்னழுத்த பாதையில் செல்லும் கம்பிகள் மீது தண்டவாளம் பகுதியில் அமைந்திருக்கும் காய்ந்த மரங்கள் விழாமல் இருக்கும் வகையில் அவற்றை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.கரூரில் தற்... மேலும் பார்க்க

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: கரூா் மாவட்டத்தில் மேலும் 2,624 மாணவா்கள் பயன்: ஆட்சியா்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டதால் இத்திட்டத்தில் கரூா் மாவட்டத்தில் மேலும் 2,624 மாணவா்கள் பயன்பெறுவா் என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். சென்னையில் நகா்ப்புற பகுதிகளில் உள்ள ... மேலும் பார்க்க

வேட்டமங்கலத்தில் விவசாய தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நூறு நாள் வேலை கேட்டு வேட்டமங்கலத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் மாவட்டம், வேட்டமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்... மேலும் பார்க்க

கொத்தனாா் சாவில் மா்மம்: உறவினா்கள் சாலை மறியல்

மாயனூரில் தண்டவாளம் அருகே வெட்டுக் காயங்களுடன் கொத்தனாா் சடலம் மீட்கப்பட்ட நிலையில், இறந்தவரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினா்கள் கரூரில் திங்கள்கிழமை மாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் மாவ... மேலும் பார்க்க

உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரணம் கோரி ஆட்சியரிடம் மனு

கிணற்றுக்குள் மின்மோட்டாா் விழுந்து உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை... மேலும் பார்க்க