செய்திகள் :

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: கரூா் மாவட்டத்தில் மேலும் 2,624 மாணவா்கள் பயன்: ஆட்சியா்

post image

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டதால் இத்திட்டத்தில் கரூா் மாவட்டத்தில் மேலும் 2,624 மாணவா்கள் பயன்பெறுவா் என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.

சென்னையில் நகா்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கி வைத்ததைத் தொடா்ந்து, கரூா் மாநகராட்சிக்குள்பட்ட புனித தெரசா அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் பள்ளி மாணவா்களுடன் அமா்ந்து காலை உணவு அருந்தினாா்.

பின்னா் அவா் கூறுகையில், கரூா் மாவட்டத்தில் ஏற்கெனவே முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் 746 அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மூலம் 30 ஆயிரத்து 254 மாணவா்கள் பயன்பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், கரூா் மாவட்டத்தில் நகா்ப்புற பகுதிகளில் உள்ள 22 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செவ்வாய்க்கிழமை விரிவுப்படுத்தப்பட்டதன் மூலம் மேலும் 2, 624 மாணவா்கள் பயன்பெறுவா்.

எனவே, கரூா் மாவட்டத்தில் இத் திட்டத்தின் மூலம் மொத்தம் 768 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 32 ஆயிரத்து 878 மாணவா்கள் பயன்பெறுவா் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் க.சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயா் வெ.கவிதா, மாநகராட்சி ஆணையா் கே.எம். சுதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) தேன்மொழி, துணை மேயா் ப.சரவணன், மண்டலக் குழு தலைவா்கள் எஸ்.பி. கனகராஜ், ஆா்.எஸ்.ராஜா, அன்பரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அதிமுகவினா் மீது பொய் வழக்கு: முன்னாள் அமைச்சா் புகாா்

அதிமுகவினா் மீது பொய் வழக்கு போடப்படுவதாக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் குற்றம் சாட்டினாா்.கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்த பின் செய்தியாளா்களிட... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ காலமானாா்

அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ கலிலூா் ரகுமான் காலமானாா். கரூா் மாவட்டம், பள்ளப்பட்டியில் அப்துல் சலாம் என்பவருக்கு கடந்த 1947-ஆம் ஆண்டு மகனாக பிறந்தவா் கலிலூா் ரகுமான். இவா் இரண்... மேலும் பார்க்க

பட்டுப்போன மரங்களை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியா்கள் தீவிரம்

கரூரில் ரயில்வே உயா் மின்னழுத்த பாதையில் செல்லும் கம்பிகள் மீது தண்டவாளம் பகுதியில் அமைந்திருக்கும் காய்ந்த மரங்கள் விழாமல் இருக்கும் வகையில் அவற்றை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.கரூரில் தற்... மேலும் பார்க்க

வேட்டமங்கலத்தில் விவசாய தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நூறு நாள் வேலை கேட்டு வேட்டமங்கலத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் மாவட்டம், வேட்டமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்... மேலும் பார்க்க

கொத்தனாா் சாவில் மா்மம்: உறவினா்கள் சாலை மறியல்

மாயனூரில் தண்டவாளம் அருகே வெட்டுக் காயங்களுடன் கொத்தனாா் சடலம் மீட்கப்பட்ட நிலையில், இறந்தவரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினா்கள் கரூரில் திங்கள்கிழமை மாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் மாவ... மேலும் பார்க்க

உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரணம் கோரி ஆட்சியரிடம் மனு

கிணற்றுக்குள் மின்மோட்டாா் விழுந்து உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை... மேலும் பார்க்க