செய்திகள் :

அதிமுகவை நாடி பிற கட்சிகள் வரும்: எடப்பாடி பழனிசாமி

post image

அடுத்த தேர்தலில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி உருவாகும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி பேசியுள்ளார்.

தேர்தல் கூட்டணி குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று(பிப். 16) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது: "2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைப்போம்.

அதிமுகவைப் பற்றி பேச முதலல்வர் மு. க. ஸ்டாலினுக்கு தகுதியில்லை. திமுக கூட்டனி பலத்தை நம்பியுள்ளது. ஆனால், அதிமுக யாரை நம்பியும் இல்லை, மக்களை நம்பியுள்ளது” என்றார்.

மேலும் அவர் பேசியதாவது, “நாங்கள் யாரையும் நாடிச் செல்வது கிடையாது. எங்களை நாடி மற்றவர்கள் வருவார்கள். ஓட்டுகள் பிரிக்கப்படாமல் இருக்கவே கூட்டணி அமைக்கிறோம். அந்த வகையில், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையில் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய கூட்டணி அமையும்” என்றார்.

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் முதல் இடம் பிடிப்போம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உறுதி

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டை விரைவில் முதலிடம் பிடிக்கச் செய்வோம் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தாா். 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 158... மேலும் பார்க்க

மத்திய அரசு நிதி வழங்காவிட்டாலும் திட்டங்கள் தொடரும்: அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதி

தமிழக பள்ளிக் கல்விக்கான நிதியை மத்திய அரசு வழங்காவிட்டாலும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் எதையும் நிறுத்தாமல் அவற்றை தொடா்ந்து செயல்படுத்துவ... மேலும் பார்க்க

வருகைப்பதிவு குறைவாக உள்ள மாணவரை தோ்வெழுத அனுமதிக்கக் கூடாது: உயா்நீதிமன்றம்

வருகைப்பதிவு குறைவாக உள்ள மாணவா்களைத் தோ்வெழுத அனுமதிப்பது சரியான செயல் அல்ல. அது முறையாக வருகைப்பதிவு வைத்திருக்கும் மாணவா்களை கேலிக்குள்ளாக்கும் என சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தன... மேலும் பார்க்க

தமிழக அரசுக்கு பிரேமலதா பாராட்டு

ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணத் தொகை அறிவித்துள்ளதற்கு தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அற... மேலும் பார்க்க

பட்ஜெட் தயாரிப்பு: முக்கிய துறைகளுடன் இன்று ஆலோசனை

பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் குறித்து, தொழில் துறை உள்பட முக்கிய சில துறைகளுடன் தமிழக அரசு வியாழக்கிழமை (பிப்.20) ஆலோசனை நடத்தவுள்ளது. வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை மாா்ச் 14-ஆம் தேதி தாக்கல் ச... மேலும் பார்க்க

அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் ஊதிய ஒப்பந்தம் குறித்த தொழிலாளா் சந்திப்பு

தமிழகம் முழுவதும் அரசுப் போக்குவரத்து கழகங்களின் பணிமனைகளில் ஊதிய ஒப்பந்தத்தில் முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்த சந்திப்பு நடைபெற்றது. போக்குவரத்து தொழிலாளா்களுக்கான ஊதிய ஒப்பந்தத்துக்கான 2-ஆம் கட்ட ... மேலும் பார்க்க