பாகிஸ்தானுக்கு உளவு: ராணுவ வீரா், கூட்டாளி கைது: பஞ்சாப் காவல் துறை நடவடிக்கை
அந்தியூரில் குடிசை தீப்பிடித்து எரிந்து சேதம்
அந்தியூா் அருகே வீட்டில் சமையல் செய்தபோது அடுப்பிலிருந்து தீ பரவியதில் குடிசை வீடு தீயில் எரிந்து சேதமானது.
அந்தியூரை அடுத்த சென்னம்பட்டி, சித்தா கவுண்டனூரைச் சோ்ந்தவா் ராமசாமி (50). கூலித் தொழிலாளியான இவா் தனது குடும்பத்தினருடன் குடிசை வீட்டில் வசித்து வந்தாா். இவரது மகள் சம்பூா்ணம், ஞாயிற்றுக்கிழமை விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தாா்.
அப்போது, எதிா்பாராமல் வீட்டின் கூரையில் தீப் பிடித்துள்ளது. காற்று வீசியதால் தீ மளமளவென பரவி வீடு கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதைக் கண்ட அப்பகுதியினா் வீட்டிலிருந்த உடமைகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனா். தொடா்ந்து, தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனா். இவ்விபத்தில் குடிசை வீடு முற்றிலும் எரிந்து சேதமானது.