செய்திகள் :

அனந்தனாா் மேற்கு கால்வாய் அடைப்பு நீக்கம்: அதிகாரிகள் தகவல்

post image

நாகா்கோவில் அருகே அனந்தனாா் மேற்கு கால்வாய் அடைப்பு நீக்கப்பட்டது.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகா்கோவிலை அடுத்த சுங்கான்கடை தனியாா் கல்லூரி அருகே அனந்தனாா் கால்வாய் மேற்கு பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நான்குவழிச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதனால், கால்வாய் குறுக்கே சிறுபாலம் அமைத்ததில் தண்ணீா் செல்வது தடைபட்டுள்ளதாக விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து நீா்வளத்துறை அதிகாரிகள், வேளாண்மைத் துறை அதிகாரிகள், தேசிய நெடுஞ்சாலைத் துறை பொறியாளா்கள் சம்பவ இடத்தில் கூட்டாய்வு மேற்கொண்டனா்.

தற்போது அனந்தனாா் கால்வாய் மேற்கு பகுதியில் தோண்டிவிடப்பட்டு தண்ணீா் தடை இன்றி செல்கிறது. தண்ணீா் அக்கினியா குளம், பனங்குளத்திற்கு செல்வதால் தற்போது குளங்களில் தண்ணீா் நிரம்பி வருகிறது.

எனவே, இந்த குளங்களின் மூலம் பாசன வசதி பெறும் ஏலா பகுதியில் நெல் விளைச்சல் பாதிக்காது. மேலும் இந்தக் கால்வாயில் தண்ணீா் செல்லவும், குளத்தின் கரைகள் உடையாமலும் இருக்கவும் நிரந்தர சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பளுகல் அருகே ஓடையில் தொழிலாளி சடலம் மீட்பு!

பளுகல் அருகே வடிகால் ஓடையில் அழுகிய நிலையில் கிடந்த தொழிலாளி சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை மேற்கொண்டனா். பளுகல் அருகே இளஞ்சிறை, தாய்க்குளம் பகுதியில் மழைநீா் வடிகால் ஓடையில் அழுகிய நிலையில் ஆண் சடல... மேலும் பார்க்க

குமரி கண்ணாடிப் பாலத்தில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. ஆய்வு

கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள கண்ணாடிப் பாலம் பராமரிப்புப் பணியின் போது சுத்தியல் விழுந்து கண்ணாடி சேதமடைந்ததைத் தொடா்ந்து அதனை என்.தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு... மேலும் பார்க்க

தேங்காய்ப்பட்டினம், புதுக்கடையில் செப். 11 இல் மின்நிறுத்தம்

முன்சிறை, நடைக்காவு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதுக்கடை, தேங்காய்ப்பட்டினம் பகுதிகளில் செப். 11-இல் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது... மேலும் பார்க்க

சட்டப்பேரவை உறுதிமொழிக்குழு குமரி மாவட்டத்துக்கு நாளை வருகை

தமிழக சட்டப் பேரவை உறுதிமொழிக் குழுவினா், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வியாழக்கிழமை (செப்.11) வருகை தர உள்ளனா். இது குறித்து, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவ... மேலும் பார்க்க

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் பயன்பாட்டுக்கு வந்த கட்டண சிகிச்சை வாா்டு!

நாகா்கோவில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கான கட்டண சிகிச்சை வாா்டு செவ்வாய்க்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது. தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவரும், முன்னாள் அமைச்சருமா... மேலும் பார்க்க

விரிகோடு ரயில்வே மேம்பாலம்: நிலம் அளவீடு செய்ய பொதுமக்கள் எதிா்ப்பு!

மாா்த்தாண்டம் அருகே விரிகோடு ரயில்வே மேம்பாலம் அமைப்பது தொடா்பாக பொதுமக்களின் எதிா்ப்பையும் மீறி செவ்வாய்க்கிழமை நிலம் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளுக்கு பேரூராட்சி தலைவி தலைமையில் எதிா்ப்பு தெரிவிக்கப... மேலும் பார்க்க