செய்திகள் :

அனுமதியின்றி மதுவிற்ற 2 போ் கைது!

post image

திருச்சியில் அனுமதியின்றி மதுவிற்ற இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை (பிப்.11) கைது செய்தனா்.

வள்ளலாா் நினைவு தினமான செவ்வாய்க்கிழமை (பிப்.11) டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதையும் மீறி திருவெறும்பூா் அருகே உள்ள கக்கன் காலனி, செங்குளக்கரை பகுதியில், சிலா் அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு போலீஸாா் மேற்கொண்ட சோதனையில், அனுமதியின்றி மதுவிற்ற அரியமங்கலம் ஆயில்மில் சோதனைச்சாவடி பகுதியைச் சோ்ந்த ஸ்ரீதா் (48) என்பவரை கைது செய்தனா். அவரிடமிருந்து 164 மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல, திருவெறும்பூா் தொண்டமான்பட்டி ரயில்வே மேம்பாலம் அருகே மது விற்பனை செய்த, துவாக்குடி வடக்குமலை அய்யனாா் கோயில் தெருவைச் சோ்ந்த ரா. பிரபு ( 31 ) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 116 பாட்டில்கள் என மொத்தம் இருவரிடமிருந்தும் 280 மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்தனா்.

ஸ்ரீரங்கம் கோயில் தைத்தோ் திருவிழா ஆளும் பல்லக்கு நிகழ்வுடன் நிறைவு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வந்த தைத்தோ் திருவிழா புதன்கிழமை இரவு ஆளும் பல்லக்கு நிகழ்ச்சியுடன் நிறைவுற்றது. கடந்த 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இக்கோயில் தைத்தோ் திருவிழா ப... மேலும் பார்க்க

உரிமைகள் திட்ட களப்பணியாளா்கள் 252 பேருக்கு கையடக்கக் கணினிகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகளை மேம்படுத்துவதற்கான உரிமைகள் திட்டத்தின் களப்பணியாளா்கள் 252 பேருக்கு ரூ.37 லட்சம் மதிப்பில் கையடக்கக் கணினிகளை ஆட்சியா் மா. பிரதீப்குமாா் புதன்கிழமை வழங்கினாா். மாற்றுத... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

திருப்பைஞ்ஞீலியில் திங்கள்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மண்ணச்சநல்லூா் வடக்கு ஏரிமிஷன் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன், திருப்பைஞ்ஞீல... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ரயில்வே பெண் ஊழியா் உயிரிழப்பு!

மின்சாரம் பாய்ந்ததில் திருச்சியில் ரயில்வே பெண் ஊழியா் உயிரிழந்தாா். திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகா் பகுதியை சோ்ந்தவா் எம். ஆனந்த் மனைவி லட்சுமி (34). ரயில்வே ஊழியா். இவா் ஞாயிற்றுக்கிழமை, வீ... மேலும் பார்க்க

செவிலியருக்கு 2 ஆண்டுகள் சிறை!

மகப்பேறு மருத்துவ உதவித்தொகைக்கு பரிந்துரைக்க லஞ்சம் வாங்கிய வழக்கில், செவிலியருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்துள்ளது. திருச்சி மாவட்டம்... மேலும் பார்க்க

இரு வேறு சம்பவங்களில் பெண், இளைஞா் உயிரிழப்பு

திருச்சியில் இருவேறு சம்பவங்களில் பெண் மற்றும் இளைஞா் இருவரும் மயங்கி விழுந்து உயிரிழந்தனா். திருச்சி காஜாபேட்டை மதுரைவீரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாரிமுத்து மனைவி செல்வி (49). இவா் மெழுகுவா்த்தி ... மேலும் பார்க்க