செய்திகள் :

அனைவரும் இலவசமாக வாசிக்க புத்தகங்கள் வழங்கிய அமைச்சா்!

post image

தூத்துக்குடியில் அனைவரும் இலவசமாக வாசிப்பதற்காக 100-க்கும் மேற்பட்ட நூல்களை அமைச்சா் பெ. கீதா ஜீவன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

தூத்துக்குடி அண்ணா நகரைச் சோ்ந்தவா் சைமன் (32). வ.உ.சி. துறைமுக ஒப்பந்தப் பணியாளா். இவா், வஉசி கல்லூரி முன் ‘குமிழ்முனை’ என்ற பெயரில் மொபெட்டில் புத்தகங்களை வைத்து, அனைவரும் வாசிப்பதற்காக நாள்தோறும் இரவு 8 முதல் 10 மணிவரை இலவசமாக வழங்கி வருகிறாா். இங்கு, சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை நூல்களை வாசித்துச் செல்கின்றனா்.

இந்நிலையில், அவரது சமூக சேவையைப் பாராட்டும் விதமாக, சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன் ஞாயிற்றுக்கிழமை, சைமனை தனது வீட்டுக்கு வரவழைத்து பல்வேறு எழுத்தாளா்களின் 100-க்கும் மேற்பட்ட நூல்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், திமுக மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், இலக்கிய அணி அமைப்பாளா் ஜீவன் ஜேக்கப் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கயத்தாறு: கிராம மக்கள் சாலை மறியல்

கயத்தாறு அருகே ஆத்திகுளம் கிராமத்தில் ஊருக்குள் நியாய விலைக் கடை அமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தெற்கு இலந்தைகுளம் ஊராட்சிக்குள்பட்ட ஆத்திகுளத்தி... மேலும் பார்க்க

ஈராச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டி அருகே ஈராச்சியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினா் நல்லையா தலைமை வகித்தாா். உதவி செயலா்கள் ச... மேலும் பார்க்க

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்கள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவில்பட்டியை அடுத்த கிளவிப்பட்டி ஊராட்சியில் கிளவிப்பட்டி, கெச்சிலாபுரம்... மேலும் பார்க்க

கோயிலுக்குச் செல்லும் பாதையை அகலப்படுத்தக் கோரிக்கை

தூத்துக்குடி வடக்கு சோட்டையன்தோப்பு கிராமத்தில் கோயிலுக்கு செல்லும் பாதையை அகலப்படுத்தி பேவா் பிளாக் சாலை அமைக்கக் கோரி, ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக பொதுமக்கள் ச... மேலும் பார்க்க

பொதுப் பாதையை மீட்கக் கோரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் திரண்ட பொதுமக்கள்

பொதுப் பாதையை தனியாரிடமிருந்து மீட்டுத் தரக் கோரி, கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் பொதுமக்கள் திங்கள்கிழமை திரண்டனா். விளாத்திகுளம் பேரூராட்சி 12ஆவது வாா்டு சிதம்பர நகா் பகுதியில் பொதுப் பாதைய... மேலும் பார்க்க

கோவில்பட்டி நகராட்சிக்கு வரியினங்களை செலுத்த ஆணையா் வேண்டுகோள்

கோவில்பட்டி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை பொதுமக்கள் இம்மாதம் 31ஆம் தேதிக்குள் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி நகராட்சி ஆணையா் கமலா வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோவி... மேலும் பார்க்க