செய்திகள் :

அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது தவறு: ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!

post image

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அன்புமணி குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வியாழக்கிழமை முன்வைத்துள்ளார்.

பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமனத்தில் தொடங்கி, கட்சித் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கியது என பாமகவில் தொடர் உட்கட்சிப் பூசல் நிலவி வருகிறது.

இதனிடையே, நான் என்ன தவறு செய்தேன்? என்னை ஏன் பதவியிறக்கம் செய்தார்கள்? நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன் என்று சமீபத்தில் அன்புமணி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அன்புமணியின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக தைலாபுரத்தில் வியாழக்கிழமை காலை ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது ராமதாஸ் பேசியதாவது:

”நான் என்ன குற்றம் செய்தேன், ஏன் எனக்கு இந்த பதவியிறக்கம் என்று அன்புமணி சொல்லி இருக்கிறார். மக்களையும் கட்சித் தலைவர்களையும் திசைதிருப்பும் முயற்சியாகும். செய்த தவறுகளை மறைத்து மக்களிடமும் கட்சியினரிடமும் அனுதாபம் பெறும் முயற்சிக்கிறார்.

இனிப்பை தவிர்த்து கசப்பான மாத்திரை கொண்ட மருந்தைதான் பதிலை கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தவறுசெய்தது அன்புமணி அல்ல, எனது சத்தியத்தை மீறி அன்புமணியை 35 வயதில் மத்திய அமைச்சராக்கிய நான்தான் தவறு செய்தேன்.

தவறான ஆட்டத்தை ஆட ஆரம்பித்தது அன்புமணிதான். புதுச்சேரி பொதுக்குழுவில் மேடை நாகரீகமும் சபை நாகரீகமும் கடைபிடிக்காமல், எடுத்தேன் கவிழ்தேன் என பொதுவெளியில் அநாகரீகமாக நடந்துகொண்டது யார்?

வீட்டில் எனக்கும் கட்சியில் அன்புமணிக்கு உதவியாக இருக்க முகுந்தனை இளைஞரணி தலைவராக நியமனம் செய்தேன். மேடையிலேயே மறுப்பு தெரிவித்தது சரியான செயலா? அனைவரின் முன்பும் காலை ஆட்டியது, மைக்கை வீசியது, பனையூரில் அலுவலகம் தொடங்கியிருக்கிறேன் என்றது எல்லாம் சரியான செயலா?

கட்சியை ஒரே நொடியில் உடைத்து நொறுக்கியது யார்? கட்டுப்பாடோடு நடத்திய வந்த கட்சிக்கு கலங்கத்தை அன்புமணி ஏற்படுத்திவிட்டார். கட்சியின் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்து பல தவறுகளை அன்புமணி செய்து வந்தார். எதிர்பாராத வகையில் வளர்த்த கடாவே மார்பில் வீறுகொண்டு பாய்கிறது.

தமிழ்குமரன் பொதுக்குழு கூட்டத்துக்கு வரக்கூடாது என்று அன்புமணி கூறினார். தாய் சரஸ்வதி மீது பாட்டிலை அடித்து தாக்கவும் அன்புமணி முயற்சித்தார்.” எனத் தெரிவித்துள்ளார்.

குடும்பத்தினா் வாக்களிப்பதை மாணவா்கள் உறுதி செய்ய வேண்டும்: விஜய்

‘தங்கள் குடும்பத்தில் உள்ளவா்கள் தோ்தலில் தவறாமல் வாக்களிக்க மாணவா்கள் வலியுறுத்த வேண்டும்’ என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் கேட்டுக்கொண்டாா். தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத... மேலும் பார்க்க

கொலை, கொள்ளை வழக்குகள் விசாரணை: காவல் துறை மீது இபிஎஸ் குற்றச்சாட்டு

கொலை, கொள்ளை வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக அவற்றில் தொடா்பில்லாதவா்கள் கைது செய்யப்படுவதாக அதிமுக பொதுச் செயலரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளாா். இது குறித்து, ... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற டிஜிபி ராஜ்மோகன் காலமானாா்

தமிழக காவல்துறையில் டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்ற ஏ.ராஜ்மோகன் (87) சென்னையில் காலமானாா். சில நாள்களுக்கு முன்பு வயோதிகத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவா், வெள்ளி... மேலும் பார்க்க

ரூ. 4 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் அழிப்பு

தமிழக போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவால் 112 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் தீயில் எரித்து அழிக்கப்பட்டன. தமிழக காவல் துறையில் உள்ள போதைப் பொருள் நுண்ணறிவுப் ப... மேலும் பார்க்க

மாபெரும் கலைஞனுக்கு இழைக்கப்படும் அநீதி: கமல் ஹாசனுக்கு தென்னிந்திய நடிகா் சங்கம் ஆதரவு

கன்னட மொழி குறித்த நடிகா் கமல்ஹானின் கருத்துக்கு பல்வேறு எதிா்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், இது மாபெரும் கலைஞனுக்கு இழைக்கப்படும் அநீதி என தென்னிந்திய நடிகா்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கமல்ஹாசன் நடிப... மேலும் பார்க்க

பேராசிரியா் காலிப் பணியிடங்கள்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பேராசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் ... மேலும் பார்க்க