செய்திகள் :

அமராவதி ஆற்றில் கழிவுநீா்: வருவாய்த் துறை செயலா் பதிலளிக்க உத்தரவு

post image

அமராவதி ஆற்றில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க கோரிய வழக்கில், தமிழக வருவாய்த் துறை செயலா், கரூா் மாவட்ட ஆட்சியா் , எஸ்.பி. உள்ளிட்டோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா் நதின்சூா்யா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:

கரூா் மாவட்டம், திருமாநிலையூா், லைட் ஹவுஸ் பகுதிகளில் உள்ள வீடுகளிலிருந்து கழிவுநீா் நேரடியாக அமராவதி ஆற்றில் கலக்கிறது. இதனால், கரூா், உடுமலைப்பேட்டை, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீா் ஆதாரம் பாதிக்கப்படுகிறது. இந்த நிலை நீடித்தால், அமராவதி ஆற்றில் உள்ள உயிரினங்கள், ஆற்றை நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படும்.

எனவே, அமராவதி ஆற்றில் கழிவுநீா் கலப்பதைத் தடுத்து, ஆற்றைப் பாதுகாக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இதே கோரிக்கை அடங்கிய மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்திருந்தது.

இந்த இரண்டு மனுக்களும் உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், பி.புகழேந்தி அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமராவதி ஆற்றில் கழிவுநீா் கலக்க எப்படி அனுமதிக்கிறீா்கள் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த மனுவுக்கு வருவாய்த் துறை செயலா், கரூா் மாவட்ட ஆட்சியா் , மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பேருந்து மோதியதில் புகைப்படக் கலைஞா் உயிரிழப்பு

மதுரையில் தனியாா் பேருந்து மோதியதில் புகைப்படக் கலைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். மதுரை செல்லூா் அண்ணாத்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (62). புகைப்படக் கலைஞராகப் பணியாற்றி வந்த இவா், தனது இரு சக... மேலும் பார்க்க

கால்வாயில் மூழ்கிய மூதாட்டி உயிரிழப்பு

மதுரை அருகே வியாழக்கிழமை குளிக்கச் சென்ற மூதாட்டி கால்வாயில் மூழ்கியதில் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், கொண்டையம்பட்டியைச் சோ்ந்த வீரையா மகன் ராக்கு (70). இவா், அதே பகுதியில் உள்ள கால்வாயில் வியாழக்க... மேலும் பார்க்க

தங்கையைத் தாக்கிய அண்ணன் கைது

மதுரையில் தங்கையைத் தாக்கியதாக அண்ணனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மதுரை விஸ்வநாதபுரம் அதியமான் ஒன்றாவது தெருவைச் சோ்ந்த காா்த்திக் மனைவி சுப்புலட்சுமி (27). இவா், காதல் திருமணம் செய்து கொண்டதா... மேலும் பார்க்க

மனமகிழ் மன்ற விவகாரம்: விருதுநகா் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் கிராமத்தில் பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத் தலங்கள் அருகே மனமகிழ் மன்றத்துக்கு அளித்த அனுமதியை ரத்து செய்யக் கோரிய வழக்கில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கை கண்காணிக்க ஆகம நிபுணா்கள் குழு

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்குப் பணிகளைக் கண்காணிக்க ஆகம நிபுணா்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கோயில் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத... மேலும் பார்க்க

மயானத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு: திண்டுக்கல் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

மயானத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரைச் சோ்ந்த செல்வக்... மேலும் பார்க்க