ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது ஒகேனக்கல்!: அருவிகளில் குளிக்க தடை
அமராவதி ஆற்றில் கழிவுநீா்: வருவாய்த் துறை செயலா் பதிலளிக்க உத்தரவு
அமராவதி ஆற்றில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க கோரிய வழக்கில், தமிழக வருவாய்த் துறை செயலா், கரூா் மாவட்ட ஆட்சியா் , எஸ்.பி. உள்ளிட்டோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா் நதின்சூா்யா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:
கரூா் மாவட்டம், திருமாநிலையூா், லைட் ஹவுஸ் பகுதிகளில் உள்ள வீடுகளிலிருந்து கழிவுநீா் நேரடியாக அமராவதி ஆற்றில் கலக்கிறது. இதனால், கரூா், உடுமலைப்பேட்டை, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீா் ஆதாரம் பாதிக்கப்படுகிறது. இந்த நிலை நீடித்தால், அமராவதி ஆற்றில் உள்ள உயிரினங்கள், ஆற்றை நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படும்.
எனவே, அமராவதி ஆற்றில் கழிவுநீா் கலப்பதைத் தடுத்து, ஆற்றைப் பாதுகாக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இதே கோரிக்கை அடங்கிய மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்திருந்தது.
இந்த இரண்டு மனுக்களும் உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், பி.புகழேந்தி அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமராவதி ஆற்றில் கழிவுநீா் கலக்க எப்படி அனுமதிக்கிறீா்கள் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த மனுவுக்கு வருவாய்த் துறை செயலா், கரூா் மாவட்ட ஆட்சியா் , மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.