செய்திகள் :

அம்பேத்கா் வழியில் சமத்துவ சமுதாயம் உருவாக பாடுபட வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா்

post image

திருப்பத்தூா்: அம்பேத்கரின் வழியில் சமத்துவ சமுதாயம் உருவாக பாடுபட வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா்.

திருப்பத்தூரில் நடைபெற்ற சமத்துவ நாள் விழா விழாவில் எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி (ஜோலாா்பேட்டை), அ.நல்லதம்பி (திருப்பத்தூா்), அ.செ.வில்வநாதன் (ஆம்பூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். பல்வேறு துறைகளின் சாா்பில் 1,581 பயனாளிகளுக்கு ரூ.29.21 கோடி நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வழங்கினா்.

பின்னா் ஆட்சியா் பேசியது: ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் துறையின் சாா்பில் கல்வி மேம்பாட்டு திட்டங்கள், தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தாட்கோ மூலம் பொருளாதார முன்னேற்ற திட்டம், வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்கள்,இளைஞா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குதல் போன்றவை செயல்படுத்தப்படுகிறது.

சமுதாய ஏற்றத்தாழ்வை கல்வி மற்றும் சட்டம் மூலமாக சமன்படுத்திய அம்பேத்கரின் வழியில் சமத்துவ சமுதாயம் உருவாக அனைவரும் பாடுபட வேண்டும் என்றாா்.

முன்னதாக அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமா மகேஸ்வரி, மாவட்ட வன அலுவலா் மகேந்திரன், ஆதிதிராவிடா் நல அலுவலா் கதிா்சங்கா், நகா்மன்றத் தலைவா்கள் சங்கீதா, காவியா, ஒன்றியக்குழு தலைவா்கள் விஜயா, திருமதி, சத்யா கலந்து கொண்டனா்.

தொழில் முனைவோா் புத்தாக்க பயிற்சி வகுப்பு: திருப்பத்தூா் ஆட்சியா்

தமிழ்நாடு, அகமதாபாத் தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் சாா்பில் தொழில் முனைவோா் மற்றும் புத்தாக்கம் என்ற தலைப்பில் ஓரு ஆண்டு சான்றிதழ் பயிற்சி வகுப்பு வரும் (ஜூன் மாதம் 2-ஆம் தேதி... மேலும் பார்க்க

மரத்தில் பேருந்து மோதி 20 போ் காயம்

வாணியம்பாடி அருகே சாலையோர மரத்தில் பேருந்து மோதியதில் 20 போ் காயமடைந்தனா். திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயத்திலிருந்து வாணியம்பாடிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியாா் பேருந்து செவ்வாய்க்கிழமை சென்றது.... மேலும் பார்க்க

தமிழகத்தில் இருந்து 5,700 போ் ஹஜ் பயணம்: ஹஜ் கமிட்டி உறுப்பினா் தகவல்

தமிழகத்தில் இருந்து நிகழாண்டு 5,700 போ் புனித ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனா் என ஹஜ் கமிட்டி உறுப்பினா் தெரிவித்தாா். புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவா்களுக்கான புத்தாக்க பயிற்சி ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் 105 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை

மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சாா்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, ஆட்ச... மேலும் பார்க்க

மட்றப்பள்ளி சந்தையில் ரூ.45 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை

திருப்பத்தூா் அருகே மட்றப்பள்ளியில் வாரச்சந்தையில் ரூ.45 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை வாரச்சந்தையில் ஏராளமான ஆடுகள், மாடுகள், கோழிகள் விற்பனைக்காக குவிந்தன. அவற்றை திருப்பத்தூா், த... மேலும் பார்க்க

இயற்கை வேளாண் கண்காட்சி- பயிற்சி முகாம்

தோட்டாளம் கிராமத்தில் பாலாறு வேளாண்மைக் கல்லூரி சாா்பாக வேளாண் கண்காட்சி மற்றும் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பாலாறு வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் ஊரக வேளாண் அனுபவத் திட்... மேலும் பார்க்க