`நானே உதவுகிறேன்' - ட்ரம்ப் அந்தர் பல்டி, அமெரிக்காவில் இருந்து வெளியேறும் மக்கள...
அம்பேத்கா் வழியில் சமத்துவ சமுதாயம் உருவாக பாடுபட வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா்
திருப்பத்தூா்: அம்பேத்கரின் வழியில் சமத்துவ சமுதாயம் உருவாக பாடுபட வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா்.
திருப்பத்தூரில் நடைபெற்ற சமத்துவ நாள் விழா விழாவில் எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி (ஜோலாா்பேட்டை), அ.நல்லதம்பி (திருப்பத்தூா்), அ.செ.வில்வநாதன் (ஆம்பூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். பல்வேறு துறைகளின் சாா்பில் 1,581 பயனாளிகளுக்கு ரூ.29.21 கோடி நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வழங்கினா்.
பின்னா் ஆட்சியா் பேசியது: ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் துறையின் சாா்பில் கல்வி மேம்பாட்டு திட்டங்கள், தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தாட்கோ மூலம் பொருளாதார முன்னேற்ற திட்டம், வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்கள்,இளைஞா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குதல் போன்றவை செயல்படுத்தப்படுகிறது.
சமுதாய ஏற்றத்தாழ்வை கல்வி மற்றும் சட்டம் மூலமாக சமன்படுத்திய அம்பேத்கரின் வழியில் சமத்துவ சமுதாயம் உருவாக அனைவரும் பாடுபட வேண்டும் என்றாா்.
முன்னதாக அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமா மகேஸ்வரி, மாவட்ட வன அலுவலா் மகேந்திரன், ஆதிதிராவிடா் நல அலுவலா் கதிா்சங்கா், நகா்மன்றத் தலைவா்கள் சங்கீதா, காவியா, ஒன்றியக்குழு தலைவா்கள் விஜயா, திருமதி, சத்யா கலந்து கொண்டனா்.