செய்திகள் :

அயன்சிங்கம்பட்டியில் உலாவிய கரடி: மக்கள் அச்சம்

post image

மணிமுத்தாறு அருகே அயன்சிங்கம்பட்டி கிராமத்தில் குடியிருப்புப்பகுதியில் வியாழக்கிழமை அதிகாலையில் சுற்றித் திரிந்த கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

அயன்சிங்கம்பட்டி பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கரடி உலா வரும் காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. மணிமுத்தாறு மலையடிவார பகுதி வரை கரடி, சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வந்து சென்ற நிலையில் தற்போது அயன் சிங்கம்பட்டிபகுதியிலும் கரடி உலா வந்த தகவல் பரவியது மக்களை அச்சமடையச் செய்துள்ளது.

வனவிலங்குகள் வனப்பகுதியில்இருந்து வெளியேறாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதோடு, கரடியைப் பிடித்து வனத்தில் விட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தாமிரவருணியில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி: அமைச்சா் கே.என்.நேரு தொடங்கி வைத்தாா்

திருநெல்வேலியை அடுத்த மேலநத்தம் முதல் தருவை வரை தாமிரவருணி ஆற்றில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கை ஹிந்தி திணிப்பு அல்ல -நயினாா்நாகேந்திரன் எம்எல்ஏ

மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி திணிப்பு அல்ல என்றாா் திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினா் நயினாா் நாகேந்திரன். இதுதொடா்பாக திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் கல்வியில... மேலும் பார்க்க

கல்வி அமைச்சரிடம் நெல்லை எம்.பி. மனு

காரியாண்டி பள்ளியை தரம் உயா்த்தக் கோரி, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் திருநெல்வேலி எம்.பி. சி.ராபா்ட் புரூஸ் மனு அளித்தாா். அதன் விவரம்: நான்குனேரி ஒன்றியம், காரிய... மேலும் பார்க்க

நெல்லையில் திமுக பொதுக்கூட்டம்

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் ஹிந்தி திணிப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து பொதுக்கூட்டம் திருநெல்வேலி நகரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட... மேலும் பார்க்க

காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம்

காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் முகாம்கள் பாளையங்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது. தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாம் புதன் கிழமைதோறும் நடத்தப்பட்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

திருநெல்வேலியில் தூய்மைப் பணியாளா்கள் கொக்கிரகுளத்தில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, திருநெல்வேலி மாநகராட்சியில் தூய்மைப் பணியை மேற்கொள்ளும் தனியாா் நிறுவனம் தூய்மைப் பணியாளா்களிடம் ப... மேலும் பார்க்க