செய்திகள் :

அரசியலில் களமிறங்கும் சூர்யா? நற்பணி இயக்கம் மறுப்பு!

post image

நடிகர் சூர்யா குறித்து பரவும் அவதூறுகளுக்கு அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு தேர்தல் வரவிருக்கும் நிலையில் சூர்யாவும் இந்தப் பிரசாரத்தில் கலந்துகொள்வாரென தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், இது குறித்து அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

சூர்யாவின் கோட்பாடுகளுக்கு முரணான பொய்யான செய்தி

ஊடக நண்பகர்களுக்கும், சமூக வலைத்தள நண்பர்கள், சகோதர, சகோதரிகளுக்கும் அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பில் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த சில நாள்களாக அண்ணன் சூர்யா அவர்கள் பற்றி சில பொய்யான தகவல்கள் இணைய ஊடகங்களில் பரவி வருகின்றன. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அண்ணன் சூர்யா அவர்கள் களமிறங்கப் போகிறார் என்று சமூக வலைத்தளங்களை மையமாக வைத்து இந்தப் பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருகிறது.

இந்தச் செய்தி உண்மைக்கு மாறான போலியான தகவல் என்பது மட்டுமல்ல, அண்ணன் சூர்யாவின் கோட்பாடுகளுக்கு முரணானது.

நிறைவாக வாழும் சூர்யா

கலை உலகப் பயணமும், அகரமும் இப்போதைய அவர் வாழ்வுக்கு போதுமான நிறைவைத் தந்துள்ளது.

சமீபத்தில் நடந்த அகரம் நிகழ்வு தமிழ்நாடு மட்டுமின்றி உலகு தழுவிய அளவில் கவனம் ஈர்க்கப்பட காரணமானவர்களாகிய உங்களுக்கு எங்கள் மகிழ்ச்சி கலந்த நன்றிகள்.

அண்ணன் சூர்யாவை நேசிக்கும் கோடிக்கணக்கான தம்பி, தங்கைகள், நண்பர்களின் வாழ்த்துக்களோடு சினிமாவில் மட்டுமே அண்ணனின் கவனம் இருக்கும்.

எங்கள் அண்ணன் சூர்யா அவர்கள் பற்றி வெளியான போலியான இந்தச் செய்தியைத் திட்டவட்டமாக மறுக்கிறோம். நன்றி எனக் கூறப்பட்டுள்ளது.

சூர்யா நடித்து கடைசியாக வெளியான ரெட்ரோ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது கறுப்பு படத்தில் நடித்து முடித்துள்ளார்.

The All India Surya Charitable Foundation has issued a statement regarding the defamation allegations being spread about actor Surya.

20 வது பிறந்தநாள் கொண்டாடிய பிக் பாஸ் ஜோவிகா!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற, நடிகையும் திரைப்பட தயாரிப்பாளருமான ஜோவிகா 20 வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். பதின் பருவத்திலிருந்து 20களில் நுழைவது, புதிய வியப்புகளையும் அச்சங்களையும் ஒர... மேலும் பார்க்க

22 ஆண்டுகளுக்குப் பிறகு மகனும் தந்தையும்... படப்பிடிப்பு தொடங்கியது!

நடிகர் ஜெயராமும் அவரது மகன் காளிதாஸும் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார்கள். ஆகாஷங்கள் ஆயிரம் எனப் பெயரிடப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக படக்குழு தெரிவித்துள்ளது. மலையாளத்தின் மூத்த ந... மேலும் பார்க்க

ஆண்டின் சிறந்த வீரர் விருது... அதிகமுறை வென்று முகமது சாலா சாதனை!

லிவர்பூல் கால்பந்து வீரர் முகமது சாலா மூன்றாவது முறையாக பிஎஃப்ஏ ஆண்டின் சிறந்த வீரர் விருதை வென்று சாதனை படைத்துள்ளார். எகிப்திய நாட்டைச் சேர்ந்த முகமது சாலா (33) இங்கிலாந்தின் பிரீமியர் லீக்கில் லிவர... மேலும் பார்க்க

அசோக் செல்வன், நிமிஷா நடிப்பில் புதிய படம்!

நடிகர்கள் அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.நடிகர் அசோக் செல்வன் தமிழில் வளர்ந்துவரும் நடிகராக இருக்கிறார். அதேபோல், சித்தா மற்றும் டிஎன்ஏ திரைப்படங்களில் ... மேலும் பார்க்க

ஜெயிலர் வசூலைக் கூலி முறியடிக்குமா? திருப்பூர் சுப்பிரமணியம் பதில்!

கூலி திரைப்படம் குறித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் பேசியுள்ளார்.நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் ஆக. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்ச... மேலும் பார்க்க

கார்த்தியுடன் இணைந்து நடிக்கும் ஜீவா?

நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு வில்லனாக ஜீவா நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நடிகர் கார்த்தி மெய்யழகன் வெற்றிக்குப் பின் வா வாத்தியார் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்... மேலும் பார்க்க