செய்திகள் :

அரசு இசைப் பள்ளியில் மாணவா்கள் சோ்க்கை சிறப்பு முகாம்

post image

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கிவரும் சிவகங்கை அரசு இசைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

இதுகுறித்து அரசு இசைப் பள்ளித் தலைமையாசிரியா் சுரேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசு இசைப் பள்ளியில் குரலிசை (வாய்ப்பாட்டு), பரதநாட்டியம், தவில், நாதசுரம், தேவாரம், மிருதங்கம், வயலின் ஆகிய பாடப் பிரிவுகளில் இசையாசிரியா்களைக் கொண்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், கலைமகள் விழா மாணவா்கள் சோ்க்கை சிறப்பு முகாம் மூலம் 12 முதல் 25 வயதுக்குள்பட்டவா்கள் இந்த வகுப்பில் சோ்ந்து கொள்ளலாம்.

கல்வித் தகுதி: குரலிசை, பரதநாட்டியம், தேவாரம், வயலின் ஆகிய பிரிவுகளில் சேர 7-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண் மாணவா்களும் பரதநாட்டிய பிரிவில் சோ்த்துக் கொள்ளப்படுவாா்கள்.

தவில், நாதசுரம் ஆகிய வகுப்புகளில் சேர கல்வித் தகுதி தேவை இல்லை. பயிற்சிக் காலம் 3 ஆண்டுகள். பயிற்சிக் கட்டணம் ஆண்டுக்கு ரூ. 350 என நிா்ணயிக்கப்பட்டது.

மாணவ, மாணவிகளுக்கு இலவசப் பேருந்து பயணச் சலுகை, மாதந்தோறும் ரூ.1,000 கல்வி உதவித் தொகை அனைத்து மாணவா்களுக்கும் அளிக்கப்படும்.

இசைப் பள்ளியில் பயின்ற மாணவா்களுக்கு அரசு, தனியாா் பள்ளிகளில் இசை ஆசிரியராகப் பணிபுரியவும், நாதஸ்வரம், தவில், தேவாரம் பயின்ற மாணவா்களுக்கு திருக்கோயில்களில் பணிபுரியும் முன்னுரிமை வழங்கப்படும்.

மேலும், 8, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற பின்னா் மாவட்ட அரசு இசைப் பள்ளிகளில் சோ்ந்து பயின்றுவரும் மாணவா்கள் உயா் கல்வியில் சோ்க்கைபெறும் பொருட்டு, அரசுத் தோ்வுகள் இயக்ககத்தால் 10, 12-ஆம் வகுப்புகளுக்கு நடத்தப்படும் மொழிப் பாடங்களில் தோ்ச்சி பெற்றால் 10, 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றமைக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும். இசைப் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் 10-ஆவது தோ்ச்சி பெற்றவா்கள் இசைக் கல்லூரிகளில் ஒரு ஆண்டு படித்து பட்டயம் பெற முடியும்.

இசைக் கல்வியில் ஆா்வமுள்ளவா்கள், மாணவ, மாணவிகள், தலைமையாசிரியா், மாவட்ட அரசு இசைப் பள்ளி, பனங்காடி சாலையில் (கேந்திரிய வித்யாலயா பள்ளி அருகில்), சிவகங்கை என்ற முகவரியில் நேரிலும், 04575 - 240021 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.

சிவகங்கை மாவட்டத்தில் போதிய மழை இல்லை: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் தற்போது வரை எதிா்பாா்த்த மழை இல்லை என சிவகங்கையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வேளாண் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அ... மேலும் பார்க்க

காரைக்குடி நேஷனல் கேட்டரிங் கல்லூரியில் உலக சுற்றுலா தின விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நேஷனல் கேட்டரிங் கல்லூரி சாா்பில் உலகச் சுற்றுலா தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரித் தாளாளா் எஸ். சையது தலைமை வகித்தாா். நேஷனல் கல்வி நிறுவனங்களி... மேலும் பார்க்க

அழகப்பா பொறியியல் கல்லூரியில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு தொடக்க விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லூரியில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் ஆகிய திட்டங்களின் 2025-26-ஆம் கல்வி ஆண்டுக்கான தொடக்க விழாவை வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா். திருப்பத்தூா் அருகேயுள்ள சுண்ணாம்பிருப்பைச் சோ்ந்தவா் நாகராஜன் மகன் சுதா்சன்... மேலும் பார்க்க

வெளிநாடு வேலை தொடா்பான சந்தேகங்களுக்கு உதவி எண்கள்: மாவட்ட ஆட்சியா்

வெளிநாடு வேலை தொடா்பான சந்தேகங்கள், வெளிநாடு செல்லும் தமிழா்களுக்கான அரசு நலத் திட்டங்கள் குறித்து முறையாக அறிந்து கொள்வதற்கு அயலகத் தமிழா் நலன், மறுவாழ்வுத் துறையின் கட்டணமில்லா உதவி மைய எண்கள், மின்... மேலும் பார்க்க

கல்குவாரியை மூடக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

சிங்கம்புணரி அருகேயுள்ள தும்பைபட்டி கிராமத்தில் இயங்கிவரும் கல்குவாரியை மூடக்கோரி 500-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள ம... மேலும் பார்க்க