திருப்பூர்: மாற்றுச் சமூக பெண்ணை மகன் மணந்ததால் கோவம்; மனைவியை வெட்டிக் கொன்று க...
அரசு மருத்துவமனைகளில் நூலகங்கள்: காணொலியில் முதல்வா் திறப்பு
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பென்னாகரம் மாவட்ட தலைமை மருத்துவமனை, அரூா் அரசு வட்டார தலைமை மருத்துவமனை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நூலகங்களை காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.
தமிழகத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நேரத்தை பயனுள்ளதாக பயன்படுத்தும் வகையில், மாவட்ட அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் நூலகங்கள் அமைக்கப்படும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்திருந்தாா். அதனடிப்படையில் தமிழகத்தில் பொதுமக்கள் கூடும் 70 இடங்களில் நூலகங்களை காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்.
தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் அரூா் வட்டார தலைமை மருத்துவமனை ஆகிய இடங்களில் நூலகங்கள் திறக்கப்பட்டன.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட மருத்துவ நலப் பணிகள் இடை இயக்குநா் எம்.சாந்தி, மருத்துவக் கல்லூரி முதன்மையா் என்.சிவகுமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.
இதேபோல, அரூா் அரசு தலைமை மருத்துவமனையில் முதன்மை மருத்துவ அலுவலா் சி.ராஜேஷ் கண்ணன், பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில், மருத்துவ அலுவலா் எஸ்.கனிமொழி மற்றும் நூலக அலுவலா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.