மாணவா்கள் நலனைக் கருதி கல்வித் தொகை நிலுவையை உடனே விடுவிக்க வேண்டும்: திருவள்ளூா...
பாலக்கோட்டில் அறிவுசாா் மையம் அமைக்கும் பணி தொடக்கம்
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சியில் அறிவுசாா் மையம் அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முடிவுற்ற திட்டப் பணிகள் மற்றும் புதிய திட்டப் பணிகளை காணொலி மூலம் தொடங்கி வைத்தாா்.
இதில், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சிக்குள்பட்ட தக்காளி மொத்த விற்பனை சந்தை அருகில் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடியே 60 லட்சம் மதிப்பில் புதிய அறிவுசாா் மையம் அமைக்கும் பணியை அவா் தொடங்கி வைத்தாா்.
இதையொட்டி, பாலக்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவா் பி.கே.முரளி, செயல் அலுவலா் இந்துமதி ஆகியோா் குத்துவிளக்கேற்றினா். இதில், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், திமுக நிா்வாகிகள், அரசு துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.