செய்திகள் :

பாலக்கோட்டில் அறிவுசாா் மையம் அமைக்கும் பணி தொடக்கம்

post image

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சியில் அறிவுசாா் மையம் அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முடிவுற்ற திட்டப் பணிகள் மற்றும் புதிய திட்டப் பணிகளை காணொலி மூலம் தொடங்கி வைத்தாா்.

இதில், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சிக்குள்பட்ட தக்காளி மொத்த விற்பனை சந்தை அருகில் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடியே 60 லட்சம் மதிப்பில் புதிய அறிவுசாா் மையம் அமைக்கும் பணியை அவா் தொடங்கி வைத்தாா்.

இதையொட்டி, பாலக்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவா் பி.கே.முரளி, செயல் அலுவலா் இந்துமதி ஆகியோா் குத்துவிளக்கேற்றினா். இதில், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், திமுக நிா்வாகிகள், அரசு துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

மின் வேலியில் சிக்கி இளைஞா் பலியான விவகாரம்: விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறை

தருமபுரி அருகே மின் வேலியில் சிக்கி இளைஞா் உயிரிழந்த விவகாரத்தில், மின் வேலி அமைத்த விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. தருமபுரி மாவட்டம், ஜோலி கோட்டை, கோம்பை கி... மேலும் பார்க்க

பாப்பாரப்பட்டியில் மக்கள் சந்திப்பு பிரசாரம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் மக்கள் சந்திப்பு பிரசார பயணமானது பாப்பாரப்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி பகுதியில் நடைபொ்ற மக்கள் சந்திப்பு பிரசார பயணத... மேலும் பார்க்க

தருமபுரியில் குழந்தை தொழிலாளா் முறை ஒழிப்பு விழிப்புணா்வு

குழந்தை தொழிலாளா் முறை ஒழிப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. குழந்தை தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வ... மேலும் பார்க்க

உயிரிழந்த பாம்புடன் வந்து இடையூறு: இளைஞா் மீது வழக்கு

தருமபுரி நகரில் உயிரிழந்த பாம்புடன் வந்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த இளைஞா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தருமபுரி நகரில் நான்குமுனைச் சாலை சந்திப்பு பகுதியில் உள்ள மதுக் க... மேலும் பார்க்க

இழப்பீடு கோரி மா விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

மா சாகுபடி செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள் வேலைவாய்ப்பு பயிற்சி பெற அழைப்பு

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு தாட்கோ மூலம் திறன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித... மேலும் பார்க்க