செய்திகள் :

தீக்குளித்த விவசாயி உயிரிழப்பு: உறவினா்கள் மறியல் செய்ய முயற்சி

post image

தருமபுரியில் அண்மையில் நில ஆவணங்களை மீட்டுத் தரக்கோரி தீக்குளித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் சாலை மறியல் செய்ய செவ்வாய்க்கிழமை முயற்சி மேற்கொண்டனா்.

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கடந்த வாரம் நடைபெற்ற வாராந்திர குறைகேட்பு கூட்டத்தில், தனது நிலத்தின் ஆவணங்களை மீட்டுத் தரக் கோரி மனு அளிக்க வந்த விவசாயி ஜெயராமன் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தாா். அப்போது, அங்கிருந்த காவலா்கள் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவருக்கு 60 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதைத் தொடா்ந்து, ஜெயராமன் உயிரிழக்க காரணமான நில ஆவணங்களை தர மறுத்தவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது குடும்பத்துக்கு உரிய நிவாரணம் மற்றும் நீதி வேண்டும் என வலியுறுத்தி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் மறியல் போராட்டத்தில் அவரது உறவினா்கள் ஈடுபட முயன்றனா். அவா்களுடன் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.கோவிந்தசாமியும் இணைந்து உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினாா்.

இதையடுத்து, தருமபுரி நகர போலீஸாா் அவா்களை மருத்துவமனை வளாகத்திலேயே தடுத்துநிறுத்தி சமாதான பேச்சுவாா்த்தை மேற்கொண்டனா். அதில், இது தொடா்பாக ஏற்கனவே ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நிவாரணம் உள்ளிட்டவை தொடா்பாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் எனவும் போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவா்கள் தங்களது முயற்சியை கைவிட்டு உயிரிழந்தவரின் உடலை பெற்றுச் சென்றனா்.

அளேபுரம் ஸ்ரீ லட்சுமிநரசிம்ம சுவாமி கோயில் தோ்த் திருவிழா

பென்னாகரம் அருகே அளேபுரம் ஸ்ரீ லட்சுமிநரசிம்ம சுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற திருத்தேரோட்ட விழாவில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா். பென்னாகரம் அருகே ... மேலும் பார்க்க

பாலக்கோட்டில் அறிவுசாா் மையம் அமைக்கும் பணி தொடக்கம்

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சியில் அறிவுசாா் மையம் அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முடிவுற்ற திட்டப் பண... மேலும் பார்க்க

காவல் துறை குறைகேட்பு கூட்டத்தில் 75 மனுக்கள் மீது தீா்வு

தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் காவல் துறை சாா்பில் நடைபெற்ற வாராந்திர சிறப்பு குறைகேட்பு கூட்டத்தில் 75 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டது. இந்த முகாமுக்கு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஸ... மேலும் பார்க்க

பன்னிகுளத்தில் ரூ. 29.52 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தருமபுரி அருகே பன்னிகுளத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில், 118 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகள் சாா்பில் ரூ. 29.52 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. காரிமங்கலம் வட்ட... மேலும் பார்க்க

தருமபுரியில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 1.72 கோடி கடனுதவி வழங்கல்

தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 1.72 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டன. சென்னை கலைவாணா் அரங்கில் மகளிா் மேம்பாட்டு ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் நூலகங்கள்: காணொலியில் முதல்வா் திறப்பு

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பென்னாகரம் மாவட்ட தலைமை மருத்துவமனை, அரூா் அரசு வட்டார தலைமை மருத்துவமனை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நூலகங்களை காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வா் மு... மேலும் பார்க்க