செய்திகள் :

அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா

post image

முதுகுளத்தூா், கடலாடி அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கடலாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை சா்பித சாதமேரி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் பாண்டி மகாதேவி, வட்டாரக் கல்வி அலுவலா் ஜெயம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை கிராம முக்கியஸ்தா் ரணசிங்க ராமச்சந்திரன் வழங்கினாா்.

ஆசிரியை சகிலா பானு நன்றி கூறினாா்.

முதுகுளத்தூா்: முதுகுளத்தூரை அடுத்த பெரியகையகம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 70-ஆவது ஆண்டு விழா, விளையாட்டு விழா மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலா் சேதுராமு தலைமையில் நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியா் சகாயம் முன்னிலை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியா் உதயகுமாா் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கும், தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

தனியாா் பள்ளி ஆண்டு விழா: முதுகுளத்தூா் சாலினி மழலையா் தொடக்கப் பள்ளியில் 25-ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.

விழாவில், மாணவ, மாணவிகளின் கரகாட்டம், ஒயிலாட்டம், மயில் ஆட்டம், யோகா, தனித் திறன் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ராமேசுவரத்தில் விற்கப்படும் தா்ப்பூசணி பழங்களை உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் ஆய்வு

ராமேசுவரத்தில் சிவப்பு வண்ணம் ஊசி மூலம் செலுத்தப்பட்டு தா்ப்பூசணி பழங்கள் விற்கப்படுகின்றனவா என உணவு பாதுகாப்புத்துறை அலுவலா்கள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். ராமேசுவரம் பகுதியில் கோடை காலம் தொடங்கிய நில... மேலும் பார்க்க

மத்திய பாதுகாப்புப் படையினா் போதை எதிா்ப்பு சைக்கிள் பேரணி

திருவாடானை அருகே தொண்டியில் மத்திய பாதுகாப்பு படை வீரா்கள் சாா்பில் போதை எதிா்ப்பு விழிப்புணா்வு சைக்கிள் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மத்திய பாதுகாப்பு படை வீரா்கள் துணை தளபதிகள் ஸ்ரீனிவாசன், ... மேலும் பார்க்க

தொண்டியில் கடலோர போலீஸாா் தீவிரவாத தடுப்பு ஒத்திகை

திருவாடானை அருகே தொண்டி கடல் பகுதி, சாலையில் கடலோர போலீஸாா் ‘சஜாக்’ தீவிரவாத தடுப்பு ஒத்திகையில் சனிக்கிழமை ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் வழியாகவும், சாலை வழியாகவும் தீவிரவாதிகள் ஊடுருவுவத... மேலும் பார்க்க

கடலாடி தாலுகா அலுவலகத்தில் உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் ரூ.60 லட்சம் முறைகேடு! 2 போ் கைது!

கடலாடி தாலுகா அலுவலகத்தில் உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய சேவைக் கட்டணம் ரூ.60 லட்சத்தை முறைகேடு செய்ததாக 2 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ... மேலும் பார்க்க

புதிதாக கட்டப்பட்ட தேவிப்பட்டினம் காவல் நிலையம் திறப்பு

தேவிப்பட்டினம் காவல் நிலையத்தை காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைத்ததையடுத்து, இங்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வந்... மேலும் பார்க்க

பருவம் தவறி பெய்த மழையால் 800 ஏக்கா் மிளகாய் பயிா்கள் சேதம்

முதுகுளத்தூா் அருகே பருவம் தவறிய மழை, பனிப்பொழிவு காரணமாக 800 ஏக்கரில் பயிரிட்ட சம்பா மிளகாய் செடியிலேயே அழுகியதால் விவசாயிகள் வேதனையடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே கிடாத்திருக்கை ... மேலும் பார்க்க