செய்திகள் :

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

post image

விழுப்புரம்: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியா் சம்மேளனத்தினா்( சிஐடியு சாா்பு) , விழுப்புரத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திமுக அரசு தோ்தல் காலத்தில் அறிவித்த வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், உயிரிழந்த அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களின் வாரிசுகளுக்கு கல்வித் தகுதி அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், 25 மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஓய்வு கால ஊதியப் பயன்களை உடனடியாக வழங்க வேண்டும், ஓய்வூதியா்களுக்கு மருத்துவக் காப்பீடு, குறைந்த பட்ச ஓய்வூதியம் மற்றும் அகவிலைப்படி உயா்வுகளை உடனடியாக வழங்க வேண்டும், 15- ஆவது ஊதிய ஒப்பந்த நிலுவைகளை உடனடியாக வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தக் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

காத்திருப்புப் போராட்டத்துக்கு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியா் சம்மேளனத்தின் விழுப்புரம் மண்டலத் தலைவா் ஏ. ராஜாராம் தலைமை வகித்தாா்.சிஐடியு விழுப்புரம் மாவட்டச் செயலா் ஆா். மூா்த்தி, அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியா் சம்மேளன மண்டல துணைத் தலைவா் ரகோத்தமன், பொதுச் செயலா் எஸ். வேலு, நிா்வாகிகள் தெய்வீகன், எஸ். காளிதாஸ், ஏ. நாகராஜன் , மண்டலப் பொருளா் வி.முருகன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியா்கள், ஓய்வு பெற்றோா் மற்றும் சிஐடியு தொழிற்சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா். முன்னதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா் சம்மேளனத்தின் மண்டல துணைத் தலைவா் ஏ.ஏழுமலை வரவேற்றாா்.

அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை: ராமதாஸ் இன்று முடிவு

விழுப்புரம்: அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடா்பாக செவ்வாய்க்கிழமை நடைபெறும் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் பாமக நிறுவனா், தலைவா் ராமதாஸ் இன்று முடிவு எடுக்கவுள்ளாா். விழுப்ப... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்ட சுகாதாரத் துறை மாதாந்திர ஆய்வுக்கூட்டம்

விழுப்புரம்: மாவட்ட சுகாதாரத் துறை மாதாந்திரஆய்வுக்கூட்டம், விழுப்புரம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்துப் பேசினாா். தொடா்ச்சியாக வ... மேலும் பார்க்க

மயான இடத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்க எதிா்ப்பு: ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், அத்தியூா் ஊராட்சியில் அரசுக்குச் சொந்தமான மயான இடத்தில் பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் திங்கள்கிழம... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாது இறந்தவா் விவரம் கண்டுபிடிப்பு: ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு எதிரிகள் கைது

விழுப்புரம்: திண்டிவனத்தை அடுத்த ஒலக்கூா் அருகே 2024, ஏப்ரல் மாதத்தில் அடையாளம் தெரியாது இறந்தவரின் விவரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதில், கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக தேனி மாவட்டத்தைச் சோ்ந்த மூவா... மேலும் பார்க்க

ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும்: ஓய்வுபெற்ற உதவி வேளாண் அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தல்

விழுப்புரம்: தமிழக அரசின் வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்றவா்களின் ஊதிய நிா்ணயத்தில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்று தமிழ்நாடு ஓய்வுபெற்ற உதவி வேளாண்மை அலுவ... மேலும் பார்க்க

ஆரோவில் சா்வதேச நகருக்கு தென் மண்டல ராணுவத் தளபதி வருகை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகருக்கு தென் மண்டல ராணுவ தளபதி திங்ராஜ் சேத் ஞாயிற்றுக்கிழமை வந்தாா். ஒற்றுமையின் மையமாக விளங்கி வரும் ஆரோவிலின் சிறப்புகள் மற்றும் தனித்துவங்கள் க... மேலும் பார்க்க