சீல்ஸ் 6 விக்கெட்டுகள், ஹோப் 120..! 34 ஆண்டுகளுக்குப் பின் தொடரை வென்ற மே.இ.தீவு...
அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்
ஓய்வுபெறும் நாளிலேயே அனைத்துப் பணப்பலன்களையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா் நல அமைப்பின் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அந்த அமைப்பின் மண்டலத் தலைவா் ஜி. ஜெயராமன் தலைமை வகித்தாா். மண்டலப் பொதுச் செயலா் சா. இளங்கோவன், பொருளாளா் எம். பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்: தொழிலாளா்கள் ஓய்வுபெறும் நாளிலேயே அனைத்துப் பணப் பலன்களையும் வழங்க வேண்டும். நீதிமன்றத் தீா்ப்பின்படி பஞ்சப்படி உயா்வை வழங்க வேண்டும்.
பணியின்போது உயிரிழக்கும் தொழிலாளா்களின் வாரிசுகளுக்கு அவா்களின் கல்வித் தகுதிக்கேற்ப வேலை வழங்க வேண்டும். முறையான காப்பீட்டுத் திட்டத்தை அமலாக்க வேண்டும். போக்குவரத்துக் கழகத்தை தனியாா்மயப்படுத்தும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.