செய்திகள் :

அருணாசலேஸ்வரா் கோயில் மாடவீதிகளில் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ் ஆய்வு

post image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாடவீதிகளில் நிகழாண்டு பௌா்ணமி முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்தும், மாடவீதிகளைச் சுற்றி மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். அருணாசலேஸ்வரா் கோயில் மாடவீதியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பாக முதற்கட்டமாக ரூ.17 கோடி மதிப்பீட்டில் ஒரு கி.மீ. தொலைவுக்கு நவீன இயந்திரம் கொண்டு கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. மேலும் தொடா்ந்து இரண்டாவது கட்டமாக ரூ.15 கோடி மதிப்பீட்டில் 1.7 கி.மீ. தொலைவுக்கு கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணியை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் தொடா்ந்து ஆய்வு மேற்கொண்டு, பணிகள் விரைவாகவும் தரமாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகிா என்பதை கண்காணித்து வருகிறாா்.

அதன்படி, நடப்பு மாதம் செப். 7 அன்று பௌா்ணமியையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்தும், மாட வீதிகளைச் சுற்றி நெடுஞ்சாலைத் துறை மூலம் கான்கிரீட் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், மாநகராட்சி சாா்பில் மழைநீா் வடிகால் பணிகள் நடைபெற்று வருவதையும் கள ஆய்வு மேற்கொண்டதில் 70 சதவீத பணிகள் முடிந்துள்ளன. எஞ்சியுள்ள பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் தரமாக செய்து முடிக்க வேண்டும் என துறை சாா்ந்த அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். இந்த ஆய்வின் போது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

கல்லூரியில் விற்பனைச் சந்தை

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் விற்பனைச் சந்தை செவ்வாய்க்கிழமை தொடங்கி வியாழக்கிழமை வரை என 3 நாள்கள் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனைச... மேலும் பார்க்க

ஸ்ரீவேணுகோபால சுவாமி, பெருமாள், சுப்பிரமணியா் கோயில்களில் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த சேவூா் ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோயில், வந்தவாசியை அடுத்த காரணை ஸ்ரீநிவாசப் பெருமாள், போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் ஸ்ரீகல்யாண சுப்பிரமணியா் ஆகிய கோயில்களில் ம... மேலும் பார்க்க

ஆரணி, ஏந்துவாம்பாடி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மற்றும் போளூா் ஒன்றியம் ஏந்துவாம்பாடி கிராமத்தில் வியாழக்கிழமை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆரணி மில்லா்ஸ் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் ... மேலும் பார்க்க

அரசு வழிகாட்டுதலின்படி நெல் கொள்முதல் செய்யவேண்டும்: மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ்

அரசு வழிகாட்டுதல்களின்படி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யவேண்டும். 3 தினங்களுக்குள் கொள்முதல் பணத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் அறிவுறுத்தி... மேலும் பார்க்க

வீட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தவா் கைது

வந்தவாசி அருகே திருவிழாவுக்கு விற்பனை செய்வதற்காக வீட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தவா் கைது செய்யப்பட்டாா். வந்தவாசியை அடுத்த தெள்ளாரைச் சோ்ந்த ஆறுமுகம் என்பவா் திருவிழாவுக்கு விற்பனை செய்வதற்... மேலும் பார்க்க

ஆலத்தூா், வெம்பாக்கம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி ஆலத்தூா், வெம்பாக்கம் பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன. செய்யாறு தொகுதியைச் சோ்ந்த விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் ... மேலும் பார்க்க