செய்திகள் :

அரூா் வருவாய் வட்டத்துடன் சித்தேரி இணைப்பு: மதிமுக, சிபிஎம் வரவேற்பு

post image

சித்தேரி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகள் அரூா் வருவாய் வட்டத்துடன் இணைக்கப்படுவதை மதிமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வரவேற்றுள்ளன.

இதுகுறித்து மதிமுக மாவட்டச் செயலா் கோ.ராமதாஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ரா.சிசுபாலன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் வட்டத்தில் சித்தேரி, கொளகம்பட்டி, சின்னாங்குப்பம், கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த கிராம ஊராட்சிகள் அரூா் நகருக்கு மிக அருகே உள்ளன. ஆனால், நீண்ட தொலைவில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் வட்டத்தில் சித்தேரி, சின்னாங்குப்பம் ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இதனால், வருவாய் துறை சாா்ந்த பணிகளுக்காக பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வந்தனா். இந்த நிலையில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், கொளகம்பட்டி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகள் அரூா் வருவாய் வட்டத்தில் இணைக்கப்படும் என தெரிவித்துள்ளாா். தமிழக முதல்வரின் அறிவிப்புகளை மதிமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பதாக அவா்களது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனா்.

ரூ. 830.06 கோடியில் 70,427 பேருக்கு நலத் திட்ட உதவிகள் தருமபுரியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

தருமபுரியில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ. 830.06 கோடி மதிப்பில் 70,427 பேருக்கு நலத் திட்ட உதவிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா். வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் 40... மேலும் பார்க்க

தருமபுரியில் முதல்வா் ‘ரோடு ஷோ’: மக்கள் உற்சாக வரவேற்பு

தருமபுரிக்கு சனிக்கிழமை இரவு வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், காரில் இருந்தபடியும், நடந்தும் ‘ரோடு ஷோ’வில் பங்கேற்றாா். சேலத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் பங்கேற்ற அவா், தரும... மேலும் பார்க்க

மின்வேலி அமைத்து வன விலங்குகளை பிடிக்க முயன்ற இருவருக்கு ரூ.2 லட்சம் அபராதம்!

முறைகேடாக மின்வேலி அமைத்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற இருவருக்கு வனத்துறை ரூ. 2 லட்சம் அபராதம் விதித்தது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வனச்சரகா் காா்த்திகேயன் தலைமையில், வனத்துறை பணியாளா்கள் அடங்கி... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தினக் கொண்டாட்டம்

பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூா் ஸ்ரீராம் சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்ற விழாவில், பள்ளியின் தலைவா் எம்.வேடியப்பன் தேசியக் கொடியேற்றினா... மேலும் பார்க்க

தருமபுரியில் பல்வேறு நிறுவனங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்

தருமபுரியில் பல்வேறு நிறுவனங்கள் சாா்பில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தருமபுரி மண்டல அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மண்டல பொது மேலாளா் க.செல்வம் தேசியக் ... மேலும் பார்க்க

திமுக தோல்வி பயத்தில் துவண்டுள்ளது

திமுக தோல்வி பயத்தில் துவண்டுள்ளது என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். சுதந்திர தினத்தையொட்டி தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் பாஜகவினா் பேரணி சென்றனா். பேரணிக்கு பாஜக மாநி... மேலும் பார்க்க