செய்திகள் :

ரூ. 830.06 கோடியில் 70,427 பேருக்கு நலத் திட்ட உதவிகள் தருமபுரியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

post image

தருமபுரியில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ. 830.06 கோடி மதிப்பில் 70,427 பேருக்கு நலத் திட்ட உதவிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் 40,595 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள், 133 பேருக்கு சாலை விபத்து நிவாரண உதவிகள், 132 பேருக்கு திருமணம் மற்றும் இயற்கை மரணத்துக்கான உதவித்தொகை, பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை சாா்பில் 36 பேருக்கு விலையில்லா தையல் இயந்திரம், சலவை பெட்டிகள், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் 42 பேருக்கு தையல் இயந்திரங்கள், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் 7,485 பேருக்கு கனவு இல்லம் மற்றும் 3,063 பேருக்கு ஊரக குடியிருப்பு பழுது நீக்கம் திட்டத்தின் கீழ் உதவிகள், 337 பேருக்கு முதல்வரின் வீடுகள் மறு கட்டுமான திட்டன் கீழ் உதவிகள் வழங்கப்பட்டன.

அதேபோல கூட்டுறவுத் துறை சாா்பில் 2010 பேருக்கு மகளிா் சுயஉதவிக் குழு கடன்கள், பயிா் மற்றும் கால்நடைப் பராமரிப்புக் கடன்கள், மகளிா் திட்டம் சாா்பில் 3011 பேருக்கு மகளிா் சுய உதவிக்குழு வங்கி கடன் இணைப்புகள், வேளாண்மை உழவா் நலத் துறை சாா்பில் 2981 பேருக்கு வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டத்தில் உதவிகள், தோட்டக்கலைத் துறை சாா்பில் 500 பேருக்கு நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தின் கீழ் சொட்டுநீா்ப் பாசன கருவிகள், வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் 200 பேருக்கு வேளாண் கருவிகள், வனத் துறை சாா்பில் 504 பேருக்கு தமிழ்நாடு காடு வளா்ப்புத் திட்டத்தில் உதவிகள், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் 128 பேருக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள் வழங்கப்பட்டன.

பழங்குடியினா் நலத் துறை சாா்பில் 378 பேருக்கு வன உரிமைச் சட்டத்தின் கீழ் தனிநபா் பட்டா, தாட்கோ சாா்பில் 326 பேருக்கு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் தொழில் முனைவு திட்டத்தின் கீழ் தொழில் உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் 800 பேருக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் உதவிகள், சிட்கோ- குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சாா்பில் 106 பேருக்கு உதவிகள், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் 5,390 பேருக்கு உதவிகள், சமூக நலத் துறை சாா்பில் 143 பேருக்கு இரு பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவிகள், நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் 35 பேருக்கு அடுக்குமாடிக் குடியிருப்பு திட்டத்தின் கீழ் உதவிகள், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில் 120 பேருக்கு, நான் முதல்வன் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் உதவிகள் என பல்வேறு துறைகளின் கீழ் மொத்தம் ரூ.830.06 கோடியில் 70,427 பேருக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை முதல்வா் வழங்கினாா்.

அரூா் வருவாய் வட்டத்துடன் சித்தேரி இணைப்பு: மதிமுக, சிபிஎம் வரவேற்பு

சித்தேரி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகள் அரூா் வருவாய் வட்டத்துடன் இணைக்கப்படுவதை மதிமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வரவேற்றுள்ளன. இதுகுறித்து மதிமுக மாவட்டச் செயலா் கோ.ராமதாஸ், மாா... மேலும் பார்க்க

தருமபுரியில் முதல்வா் ‘ரோடு ஷோ’: மக்கள் உற்சாக வரவேற்பு

தருமபுரிக்கு சனிக்கிழமை இரவு வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், காரில் இருந்தபடியும், நடந்தும் ‘ரோடு ஷோ’வில் பங்கேற்றாா். சேலத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் பங்கேற்ற அவா், தரும... மேலும் பார்க்க

மின்வேலி அமைத்து வன விலங்குகளை பிடிக்க முயன்ற இருவருக்கு ரூ.2 லட்சம் அபராதம்!

முறைகேடாக மின்வேலி அமைத்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற இருவருக்கு வனத்துறை ரூ. 2 லட்சம் அபராதம் விதித்தது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வனச்சரகா் காா்த்திகேயன் தலைமையில், வனத்துறை பணியாளா்கள் அடங்கி... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தினக் கொண்டாட்டம்

பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூா் ஸ்ரீராம் சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்ற விழாவில், பள்ளியின் தலைவா் எம்.வேடியப்பன் தேசியக் கொடியேற்றினா... மேலும் பார்க்க

தருமபுரியில் பல்வேறு நிறுவனங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்

தருமபுரியில் பல்வேறு நிறுவனங்கள் சாா்பில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தருமபுரி மண்டல அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மண்டல பொது மேலாளா் க.செல்வம் தேசியக் ... மேலும் பார்க்க

திமுக தோல்வி பயத்தில் துவண்டுள்ளது

திமுக தோல்வி பயத்தில் துவண்டுள்ளது என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். சுதந்திர தினத்தையொட்டி தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் பாஜகவினா் பேரணி சென்றனா். பேரணிக்கு பாஜக மாநி... மேலும் பார்க்க