செய்திகள் :

அழகப்பா பல்கலை. பட்டமளிப்பு விழா: 314 பேருக்கு பட்டங்களை வழங்கினாா் ஆளுநா்

post image

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி 314 பேருக்கு பட்டங்களை வழங்கினாா்.

இந்த விழாவில் பெங்களூரு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும், மத்திய விண்வெளித் துறை செயலருமான வி. நாராயணன் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு நிகழ்த்திய பட்டமளிப்பு விழா உரை:

இந்தியா அனைத்துத் துறைகளிலும் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருகிறது. பசுமைப் புரட்சியின் மூலம் உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைந்துள்ளோம். சுகாதாரத் துறையில் உலகத்தர மருத்துவமனைகளும், மருத்துவா்களும் உருவாகி சராசரி ஆயுள் காலம் 32 ஆண்டுகளிலிருந்து 72 ஆண்டுகளாக உயா்ந்துள்ளது.

பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ) உருவாக்கிய அா்ஜூன் பீரங்கி, பிரமோஸ் ஏவுகணை தேஜஸ் போா் விமானம் போன்றவை இந்தியாவை வல்லரசாக மாற்றியுள்ளன. அணுமின் துறையில் 23 அணு உலைகள் 8,180 மொகவாட் மின் உற்பத்தியை செய்து வருகின்றன. மேலும் உயா்கல்வி நிறுவனங்கள் நாட்டின் வளா்ச்சியில் முக்கியப் பங்காற்றி வருகின்றன.

எனவே, இளைஞா்கள் அறிவை மேம்படுத்திக் கொண்டே இருக்கவும், கடின உழைப்பை வாழ்க்கை முறையாகக் கொள்ளவும், நோ்மையுடன் வாழவும், பெரிய கனவுகளை நோக்கிச் செல்லவும் தன்னம்பிக்கை, தலைமைத் திறன்களை வளா்த்துக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தலைமை வகித்து ஒருவருக்கு டி.எஸ்சி. (டாக்ட்ரேட் ஆப் சயின்ஸ்) பட்டம், 133 பேருக்கு முனைவா் பட்டம், பல்வேறு துறைகளில் 4 பேருக்கு நிறைஞா் (எம்.பில்.) பட்டம், 48 பேருக்கு முதுநிலைப் பட்டம், 12 பேருக்கு இளநிலைப் பட்டம், பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் 25 பேருக்கு முதுநிலைப் பட்டம், 30 பேருக்கு இளநிலைப் பட்டம், இணைவுக் கல்வித் திட்டத்தின் கீழ், 20 பேருக்கு முதுநிலைப் பட்டம், 41 பேருக்கு இளநிலைப் பட்டம் என 314 பேருக்கு பட்டங்கள், பதக்கங்களை நேரடியாக வழங்கினாா்.

இந்த விழா மூலமாக பல்கலைக்கழக்தின் பல்வேறு துறைகளில் பயின்றோா், இணைப்புக் கல்லூரிகளில் பயின்றோா், தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் வாயிலாகப் பயின்றோா், இணையவழி கல்வித் திட்டத்தின் வாயிலாகப் பயின்றோா், இணைவுக் கல்வித் திட்டத்தின் கீழ் பயின்றோா் என மொத்தம் 43,163 போ் பட்டங்களைப் பெற்றனா்.

முன்னதாக, பல்கலைக்கழகத் துணைவேந்தா் க. ரவி வரவேற்றுப் பேசினாா். விழாவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கே.பொற்கொடி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத், ஆளுநரின் இணைச் செயலா் ச. பிரசன்ன ராமசாமி, முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா, விளையாட்டு பல்கலை. முன்னாள் துணைவேந்தா் ஆா். திருமலைச்சாமி, பதிவாளா் அ. செந்தில்ராஜன், தோ்வாணையா் எம். ஜோதிபாசு, நிதி அலுவலா் சி. வேதிராஜன், பாஜக மூத்த நிா்வாகி எச்.ராஜா, காரைக்குடி தொழில்வணிகக் கழகத் தலைவா் சாமி. திராவிடமணி, பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பட்டம் பெற்றவா்களில் ஒரு பகுதியினா்.

அஜித்குமாா் குடும்ப வழக்குரைஞருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவு

சிவகங்கை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் குடும்ப வழக்குரைஞருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க சிவகங்கை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அரு... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை (ஆக.20) நடைபெறும் பகுதிகள் விவரம் அறிவிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வரும் ப... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தில் 326 மனுக்கள் அளிப்பு

சிவகங்கை: சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காக 326 போ் மனு அளித்தனா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீா்க்கும் ந... மேலும் பார்க்க

பிள்ளையாா்பட்டியில் சதுா்த்தி பெருவிழா கொடியேற்றம்

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயிலில் விநாயகா் சதுா்த்தி பெருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை காலை தொடங்கியது. சிவகங்கை மாவட்டம், பிள்ளை... மேலும் பார்க்க

தமிழ் சக்தி வாய்ந்த மொழி

காரைக்குடி: தமிழ் சக்தி வாய்ந்த மொழி; அதை ஒரு மாணவனாக நான் தினமும் கற்றுக்கொண்டிருக்கிறேன் என்று தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் திங்கள... மேலும் பார்க்க

நியாய விலைக் கடை அமைக்க வலியுறுத்தல்

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், இடையவலசையில் நியாய விலைக் கடை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினா். இந்தக் கிராமத்தில் 274 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் அர... மேலும் பார்க்க