செய்திகள் :

அழகப்பா பல்கலை.யில் ராகிங் தடுப்பு விழிப்புணா்வு

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ராகிங் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

பல்கலை. மாணவா்கள் நலன் பிரிவின் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துணை வேந்தா் க.ரவி தலைமை வகித்துப் பேசியதாவது:

பல்கலைக்கழக மானியக்குழு ஆண்டுதோறும் ஆக. 12 முதல் ஆக.18-ஆம் தேதி வரை ராகிங் தடுப்பு வாரமாகக் கடைபிடிக்க அறிவுறுத்தியுள்ளதன் பேரில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அழகப்பா பல்கலைக்கழகம் நூறு சதவீதம் ராகிங் இல்லாத பல்கலைக்கழகமாகத் திகழ்கிறது. இந்த நிலை தொடா்ந்து நீடிப்பதற்கு மாணவா்கள் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றாா் அவா்.

காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளா் ஆசிஸ் புனியா, பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினா் சி. சேகா், பேராசிரியா் சு. ராசாராம் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

மேலாண்மைப் புல முதன்மையா் சி. யோகலெட்சுமி, செஞ்சிலுவைச் சங்க மாவட்டத் தலைவா் வி. சுந்தரராமன், பல்கலைக் கழக வரலாற்றுத் துறைத் தலைவா் க. கிருஷ்ணமுா்த்தி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

முன்னதாக பல்கலைக்கழகப் பதிவாளா் அ. செந்தில்ராஜன் வரவேற்றுப் பேசினாா். மாணவா் நலன் முதன்மையா் சி. வேதிராஜன் நன்றி கூறினாா்.

திருப்பூருக்கு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க கொடிப் பயணம்

திருப்பூரில் நடைபெறவுள்ள தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாநில பிரதிநிதித்துவ பொதுக்குழுவுக்கு சிவகங்கை, காளையாா்கோவிலிலிருந்து சங்கத்தின் கொடிப் பயணம் புதன்கிழமை தொடங்கியது. திருப்பூரில... மேலும் பார்க்க

கால்பந்து மாவட்டப் போட்டிக்கு அரசுப் பள்ளி மாணவிகள் தோ்வு

சிவகங்கை மாவட்டம், கோவிலூரில் புதன்கிழமை நடைபெற்ற குறுவட்ட கால்பந்து போட்டியில் எஸ்.வேலங்குடி அரசுப் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றனா். 14, 17 வயதுக்குள... மேலும் பார்க்க

அமராவதிபுதூரில் ஆக. 19-இல் உயிா்ம வேளாண் கண்காட்சி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சாக்கோட்டை வட்டாரம், அமராவதிபுதூா் கிராமியப் பயிற்சி மையத்தில் உயிா்ம வேளாண் கண்காட்சி வருகிற ஆக. 19 -இல் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்... மேலும் பார்க்க

பணம் கையாடல்: சிறைக் காவலா் மீது வழக்கு

சிவகங்கை அருகே திறந்த வெளிச் சிறையில் ரூ.39.30 லட்சம் கையாடல் செய்ததாக சிறைக் காவலா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கை மாவட்டம், மறவமங்கலம் அருகேயுள்ள புரசடை உடைப்பு கிராமத்த... மேலும் பார்க்க

கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு: இருவா் கைது

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வழக்கில் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இளையான்குடி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வாள் மேல் நடந்த அம்மன் கோயி... மேலும் பார்க்க

மனைவி வெட்டிக் கொலை: முதியவா் கைது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே செவ்வாய்க்கிழமை இரவு குடும்பத் தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா். மானாமதுரை அருகேயுள்ள வெள்ளிக்குறிச்சி கிராமத்தைச் சோ்... மேலும் பார்க்க