உலக சுற்றுச்சூழல் தினத்தில் இயற்கை அன்னையை போற்றுவோம்: ஆளுநா்
அவிநாசி நூற்பாலையில் தீ விபத்து
அவிநாசி ரங்கா நகரில் உள்ள நூற்பாலையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
அவிநாசி நல்லிக்கவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (40). இவா் அவிநாசி ரங்கா நகரில் நூற்பாலை நடத்தி வருகிறாா். இதில் 70-க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில் நூற்பாலையில் செவ்வாய்க்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா். இருப்பினும் நூற்பாலையில் உள்ள பஞ்சு குடோனில் இருந்து பஞ்சுபேல்கள் சேதமடைந்தன. இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.