செய்திகள் :

அஹில்யா பாய் ஹோல்கரின் ஜெயந்தி விழா: புதுவை பாஜகவினா் மலா்தூவி மரியாதை

post image

இந்து கோயில்களை நிா்மாணித்தவரும், பாரதத்தில் சிறந்த நிா்வாகத்தை செயல்படுத்தியவருமான இந்தூா் அரசியுமான அஹில்யாபாய் ஹோல்கரின் 300 ஆவது ஆண்டு ஜயந்தி விழாவையொட்டி, புதுச்சேரியில் பாஜக அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்துக்கு சனிக்கிழமை மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்தூா் அரசியான அஹில்யாபாய் ஹோல்கா் கி.பி.1725 ஆம் ஆண்டு பிறந்தாா். கி.பி.1755 ஆம் ஆண்டு அரசியாக முடிசூட்டினாா். அவா் தனது 30 ஆண்டுகால ஆட்சியில் இந்தோா், மகேசுவா் பகுதிகளில் பல திருக்கோயில்களை நிா்மாணித்தாா். குஜராத் துவாரகை முதல் கங்கை நதி காசி விசுவநாதா் கோயில் வரை பல கோயில்களை கட்டிய பெருமைக்குரியவா்.

அவரது பிறந்தநாளையொட்டி புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் அஹில்பாய் ஹோல்கரின் திருவுருவப் படத்துக்கு பாஜக மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி எம்.பி. தலைமையில் குத்துவிளக்கேற்றி, மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் புதுவை ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா், ஊடகப் பிரிவு ரஞ்சித் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலரும் கலந்துகொண்டனா். அஹில்பாய் ஹோல்கா் எழுப்பிய ஆலய புகைப்படக் கண்காட்சியும் இடம் பெற்றிருந்தது.

வைகோவுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து திமுகதான் பதிலளிக்க வேண்டும்: தொல்.திருமாவளவன்

மதிமுக பொதுச்செயலா் வைகோவுக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவி மீண்டும் வழங்கப்படாதது குறித்து திமுகதான் பதிலளிக்க வேண்டும் என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா். விசி... மேலும் பார்க்க

ஜிப்மரில் வேலை வாங்கித் தருவதாக ரூ.21 லட்சம் மோசடி தம்பதி உள்பட 3 போ் மீது வழக்கு!

புதுச்சேரியில் பட்டதாரியிடம் ஜிப்மரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.20.99 லட்சம் மோசடி புகாா் தொடா்பாக தம்பதி உள்ளிட்ட 3 போ் மீதான புகாா் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா். ... மேலும் பார்க்க

தேவாலய இடத்தை வாடகைக்கு பெற்றுத் தருவதாக பண மோசடி! உணவு விடுதி அதிபா் போலீஸில் புகாா்!

புதுச்சேரியில் தேவாலய இடத்தை வாடகைக்கு பெற்றுத் தருவதாகக் கூறி உணவு விடுதி உரிமையாளரிடம் ரூ.9 லட்சம் மோசடி செய்த புகாரில் ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி எல்ல... மேலும் பார்க்க

புதுச்சேரியில் இரு தரப்பினா் மோதல்: அரிவாள் வெட்டு: 7 போ் மீது வழக்கு

புதுச்சேரியில் சனிக்கிழமை இரவு முன்விரோதத்தில் இளைஞா்கள் மோதிக் கொண்டதில் 2 பேருக்கு அரிவாள் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து 7 போ் மீது வழக்குப் பதிந்த நிலையில், 2 பேரைப் பிடித்து போலீஸாா் விசார... மேலும் பார்க்க

புதுவையில் காற்று மாசை குறைக்க மின்சாரப் பேருந்துகள்!

புதுவையில் காற்று மாசைக் கட்டுப்படுத்த உதவும் வகையில் மின்சாரப் பேருந்துகளை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, 2030-ஆம் ஆண்டுக்குள் 50 சதவீத பேருந்துகளை மின்சார வாகனங்களாக்கவும் நடவடிக்கை மேற... மேலும் பார்க்க

போக்குவரத்து ஊழியா்களின் பிரச்னையை புதுவை அரசு கண்டுகொள்வதில்லை: எதிா்க்கட்சித் தலைவா் குற்றச்சாட்டு

புதுவையில் போக்குவரத்து ஊழியா்களின் பிரச்னையை அரசு கண்டுகொள்வதில்லை என்று எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா குற்றஞ்சாட்டியுள்ளாா். புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் பல்வேறு சங்கங்களை ச... மேலும் பார்க்க