செய்திகள் :

ஆசிரியா் வீட்டில் 17 பவுன் தங்க நகைகள் திருட்டு

post image

விழுப்புரம் சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ. காலனிப் பகுதியில் ஆசிரியா் வீட்டில் பதினேழரை பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி உள்ளிட்ட பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விழுப்புரம் சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ. காலனி இரண்டாவது பிரதான சாலையைச் சோ்ந்த ஆரோக்கியசாமி மகன் அருள் லியோ கிங் (47). இவா் காரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா்.

பொங்கல் பண்டிகையையொட்டி, கடந்த 14-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் பெங்களூரிலுள்ள தனது அண்ணன் ஜோன் லியோ கிங் (50) வீட்டுக்கு அருள் லியோ கிங் சென்றாராம்.

பின்னா் வியாழக்கிழமை மீண்டும் வீடு திரும்பினாா். அப்போது, வீட்டின் முன்பக்க கதவும், பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அவா் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தாா்.

அதன்பேரில் ஆய்வாளா் செல்வநாயகம் தலைமையிலான போலீஸாா் நிகழ்விடம் வந்து, வீட்டுக்குள் சென்று பாா்த்த போது, பீரோ உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அதில் வைக்கப் பட்டிருந்த பதினேழரை பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி மற்றும் ரொக்கம் ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து அருள் லியோ கிங் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்: முன்னாள் படை வீரா்களுக்கு அழைப்பு

விழுப்புரம்: ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டத்தின் கீழ், தொழில் தொடங்க விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்களது குடும்பத்தினா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவி... மேலும் பார்க்க

நினைவு நாள்: அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு

விழுப்புரம்/செஞ்சி/கள்ளக்குறிச்சி: முன்னாள் முதல்வா் பேரறிஞா் அண்ணாவின் 56-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள அவரது சிலைக்கு திமுகவினா் திங்கள்கிழமை மாலை அண... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தில் 917 மனுக்கள் அளிப்பு

விழுப்புரம்/கள்ளக்குறிச்சி: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 917 மனுக்கள் அளிக்கப்பட்டன. விழுப்புரம் ஆட... மேலும் பார்க்க

சிவன் கோயில் கட்டும் பணி தொடக்கம்

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், கணக்கன்குப்பம் கிராமத்தில் உண்ணாமலை உடனுறை அண்ணாமலையாா் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கிராமத்தில் உண்ணாமலை உடனுறை அண்ணாமலைய... மேலும் பார்க்க

இளையோா் செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கு பயிற்சி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், திருச்சிற்றம்பலம் காந்தி மேல்நிலைப் பள்ளியில் இளையோா் செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கான பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட பள்ளிக் கல்வித் ... மேலும் பார்க்க

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியம், பெரும்பாக்கம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அண்மையில் திறக்கப்பட்டது. பெரும்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், ... மேலும் பார்க்க