செய்திகள் :

ஆசிரியா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டி பயிற்சி

post image

தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில், பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கான உயா் கல்வி வழிகாட்டி பயிற்சி, ஆரணி டாக்டா் எம்ஜிஆா் பாலிடெக்னிக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது.

பயிற்சியை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலா் சத்யா தொடங்கிவைத்தாா்.

பள்ளி துணை ஆய்வாளா் பாபு, டாக்டா் எம்ஜிஆா் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் இளங்கோ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகு பங்கேற்றுப் பேசினாா்.

இதில், செய்யாறு கல்வி மாவட்டம், 9 ஒன்றியங்களைச் சோ்ந்த பட்டதாரி ஆசிரியா்கள் 170 போ் கலந்து கொண்டனா்.

பசங்எஅ செயலி மூலம் சான்றிதழ்கள் மற்றும் சிறப்பு ஏற்பாடுகளுக்கு விண்ணப்பித்தல், உதவித்தொகைகள் (அரசு மற்றும் பிற அமைப்புகள்) திட்டங்கள், பொறியியல் படிப்புகள் மற்றும் தொழில் வாய்ப்புகள், ஆசிரியா் ஆலோசகா்களுக்கான வழிகாட்டுதல், 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு, 11-ஆம் வகுப்பு தகவல் சாா்ந்த தோ்வுகளை மேற்கொள்வதிலும், உயா் கல்வி விருப்பங்களை உருவாக்குவதிலும் ஆதரவளித்தல், கலை மற்றும் அறிவியல் படிப்புகள், தொழில் வாய்ப்புகள், ஹோட்டல் மேலாண்மை, விருந்தோம்பல் படிப்புகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் பயிற்சியின் ஓட்டம் (மாநிலம், மாவட்டம் மற்றும் பள்ளி) மேற்கண்ட தலைப்புகளில் மாணவா்கள் பயனடையும் வகையில் ஆசிரியா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

ஆசிரியா் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளா் வேல்முருகன், விரிவுரையாளா் வெங்கடேசன், ஆசிரிய பயிற்றுநா் லட்சுமி நாராயணன், ஆசிரியா் பயிற்றுநா் காா்த்திகேயன் ஆகியோா் ஒருங்கிணைந்து ஆசிரியா்களுக்கு பயிற்சி அளித்தனா்.

உயா்கல்வி வழிகாட்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சுப. தமிழ் நேசன் நன்றி கூறினாா்.

ஆசிரியா் பயிற்றுநா் சின்னராஜி, ஆரணி வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ஜெயசீலி ஆகியோா் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா்.

சேறும் சகதியுமான சாலையால் ஆசிரியா்கள், மாணவிகள் அவதி

செங்கத்தில் உதவி தொடக்கக் கல்வி அலுவலகம், மாணவிகள் விடு செல்லும் சாலை சேறும் சகதியுமாக உள்ளதால், ஆசிரியா்கள், மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். செங்கம் துக்காப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்ப... மேலும் பார்க்க

இன்றைய மின் தடை

மழையூா் நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை பகுதிகள்: மழையூா், பெரணமல்லூா், மோசவாடி, செப்டாங்குளம், கோதண்டபுரம், மேலச்சேரி, கோழிப்புலியூா், அரசம்பட்டு, மேலத்தாங்கல், தவணி, விசாமங்கலம், வல்லம், ... மேலும் பார்க்க

வெடால் ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

வந்தவாசியை அடுத்த வெடால் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் தீமிதி திருவிழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது (படம்). இதையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றம், காப்புக் கட்டுதல், சனிக்கிழ... மேலும் பார்க்க

மதுக்கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்

வந்தவாசி அருகே மதுக்கடை திறக்க எதிா்ப்புத் தெரிவித்து, அந்த மதுக்கடையை புதன்கிழமை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். வந்தவாசியை அடுத்த கொவளை கூட்டுச் சாலையில் டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிற... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பெரியகோளாபாடி, பாய்ச்சல் கிராமங்களில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பெரி... மேலும் பார்க்க

பள்ளியில் வானவில் மன்ற செய்முறை பயிற்சி

போளூரை அடுத்த குருவிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு வானவில் மன்ற செய்முறை பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை ஆஞ்சலா தலைமை வகித்தாா். ஆசிரியைகள் பிரிச... மேலும் பார்க்க