முஸ்லீம் ஆதரவுபெற ஆபரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பா? மமதா பற்றி அமித் ஷா கூறுவதென்ன...
ஆசிரியை வீட்டில் நகைகள் திருட்டு
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டில் தங்கம், வெள்ளி நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வாணாபுரம் வட்டம், பகண்டை கூட்டுச்சாலை கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மனைவி நித்யா (42). இவா், கடம்பூா் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறாா். இதனால், சங்கராபுரத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளாா்.
சொந்த ஊரான பகண்டை கூட்டுச்சாலைக்கு விடுமுறை நாள்களில் சென்று வருவது வழக்கம். இந்த நிலையில், கடந்த 19-ஆம் தேதி பகண்டை கூட்டுச்சாலையில் உள்ள வீட்டை பூட்டிச் சென்ற நித்யா, மீண்டும் சனிக்கிழமை வீட்டுக்குச் சென்றாா்.
அப்போது, வீட்டின் பின் பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்த நிலையில், பீரோவில் வைக்கப்பட்டிருந்த இரண்டே முக்கால் பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்ததது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், பகண்டை கூட்டுச்சாலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.