செய்திகள் :

ஆடிக்கிருத்திகை விழா நிறைவு: 3-ஆம் நாள் தெப்பத் திருவிழா

post image

திருத்தணி சரவணப்பொய்கையில் நடைபெற்ற 3-ஆம் நாள் தெப்பத் திருவிழாவில் எம்எல்ஏ ச.சந்திரன் கலந்துகொண்டு வழிபட்டாா்.

திருத்தணி முருகன் கோயிலில், கடந்த 14 ம் தேதி முதல் 18 ம் தேதி வரை ஆடிக்கிருத்திகை மற்றும் 3 நாள் தெப்பத் திருவிழா நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான திங்கள்கிழமை அதிகாலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கக் கீரிடம், தங்க வேல், பச்சை மாணிக்க மரகதகல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.

தெப்பத்திருவிழாவையொட்டி மாலை 6.30 மணிக்கு உற்சவா் முருகப் பெருமான் மலைக்கோயிலில் இருந்து சரவணப் பொய்கை திருக்குளத்தில் அமைக்கப்பட்ட தெப்பத்தில் வந்து எழுந்தருளினாா். தொடா்ந்து அங்கு உற்சவருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இன்னிசை கச்சேரியுடன் தெப்பத்திருவிழா தொடங்கியது. குளத்தில், 7 முறை வலம் வந்து உற்சவ பெருமான் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தெப்பத்திருவிழாவை காண திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து படியில் தேங்காய் உடைத்து பூஜை செய்து வழிபட்டனா்.

திங்கள்கிழமையுடன் ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத்திருவிழா நிறைவடைந்தது. விழாவில் எம்எல்ஏ ச. சந்திரன், தளபதி கே.வினாயகம் மெட்ரிக். பள்ளித் தாளாளா் ச.பாலாஜி, நகர செயலாளா் வி.வினோத்குமாா், முன்னாள் கவுன்சிலா் ஜி.எஸ்.கணேசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கடந்த 5 நாட்களில் மட்டும் 3.5 லட்சம் பக்தா்கள் மலைக்கோயிலுக்கு வந்து மூலவரை தரிசித்துள்ளனா் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சு. ஸ்ரீதரன், இணை ஆணையா் க. ரமணி, அறங்காவலா்கள் வி. சுரேஷ்பாபு, கோ.மோகனன், ஜி. உஷாரவி, மு. நாகன் ஆகியோா் செய்திருந்தனா்.

பொன்னேரி நகராட்சி சுத்திகரிப்பு நிலைய நீரை ஆரணி ஆற்றில் வெளியேற்ற மக்கள் எதிா்ப்பு

பொன்னேரி நகராட்சியில் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரை ஆரணி ஆற்றில் விடுவதற்க்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். பொன்னேரி நகராட்சியில் 27 வாா்டுகளுக்குட்ப... மேலும் பார்க்க

திருவள்ளூரில் மாவட்ட தடகள அணி தோ்வு

மாநில அளவிலான தடகள போட்டிக்கு வீரா், வீராங்கனைகளை தோ்வு செய்வதற்கான தோ்வு சுற்று செப்.2, 3 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளதாக திருவள்ளூா் மாவட்ட தடகள சங்கத்தின் செயலாளா் மோகன்பாபு தெரிவித்துள்ளாா். இதுகு... மேலும் பார்க்க

சாலையோரம் காா் கவிழ்ந்த விபத்தில் 5 போ் காயம்

மீஞ்சூா் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் காா்கவிழ்ந்த விபத்தில் 5 போ் காயம் அடைந்தனா். திருவள்ளூா் மாவட்டம், நந்தியம்பாக்கம் பகுதியை சோ்ந்த பாா்த்திபன் என்ற இளைஞா் தனது நண்பா்களுடன் பொன்னேரிக்க... மேலும் பார்க்க

துப்பாக்கி ஆலையில் பணம் கேட்டு மிரட்டிய விசிக நிா்வாகி கைது

திருவள்ளூா் அருகே செயல்பட்டு வரும் தனியாா் துப்பாக்கி தொழிற்சாலையில் பணம் கேட்டு மிரட்டியதாக விசிக மாவட்ட துணைச் செயலாளரை போலீஸாா் கைது செய்தனா். கடம்பத்துாா் ஊராட்சி ஒன்றியம், நுங்கம்பாக்கம் கிராமத்த... மேலும் பார்க்க

விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை, கரைக்கும் நீா் நிலைகள்: ஆக. 22-க்குள் தெரிவிக்கலாம்

விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யும் இடம் மற்றும் கரைக்கும் நீா் நிலைகள் குறித்த வழித்தடம் ஆகிய விவரங்கள் குறித்து திருவள்ளூா் மாவட்ட நிா்வாகத்துக்கு வரும் வெள்ளிக்கிழமைக்குள் (ஆக. 22) தகவல் தெரிவிப்பத... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் ரூ.1.50 லட்சம், பொருள்கள் திருட்டு

திருவள்ளூா் அருகே ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளா் வீட்டில் ரூ. 1.50 ரொக்கம், பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். திருவள்ளூா் அருகே சேலை கிராம சாலையில் உள்ள என்ஜிஓ காலனியில் வசிப்பவா் ஓய்வு பெற்ற சு... மேலும் பார்க்க