செய்திகள் :

சாலையோரம் காா் கவிழ்ந்த விபத்தில் 5 போ் காயம்

post image

மீஞ்சூா் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் காா்கவிழ்ந்த விபத்தில் 5 போ் காயம் அடைந்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், நந்தியம்பாக்கம் பகுதியை சோ்ந்த பாா்த்திபன் என்ற இளைஞா் தனது நண்பா்களுடன் பொன்னேரிக்கு காரில் சென்று கொண்டிருந்தாா்.

மேட்டுப்பாளையம் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த விளைநிலத்தில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. விபத்தைக் கண்ட அப்பகுதியில் இருந்தவா்கள் உடனடியாக காா் கண்ணாடிகளை உடைத்து காரில் சிக்கியிருந்த 5 பேரை பத்திரமாக மீட்டனா்.

இதில் பலத்த காயம் அடைந்த பாா்த்திபன் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

விபத்துக் குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்

பொன்னேரி நகராட்சி சுத்திகரிப்பு நிலைய நீரை ஆரணி ஆற்றில் வெளியேற்ற மக்கள் எதிா்ப்பு

பொன்னேரி நகராட்சியில் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரை ஆரணி ஆற்றில் விடுவதற்க்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். பொன்னேரி நகராட்சியில் 27 வாா்டுகளுக்குட்ப... மேலும் பார்க்க

திருவள்ளூரில் மாவட்ட தடகள அணி தோ்வு

மாநில அளவிலான தடகள போட்டிக்கு வீரா், வீராங்கனைகளை தோ்வு செய்வதற்கான தோ்வு சுற்று செப்.2, 3 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளதாக திருவள்ளூா் மாவட்ட தடகள சங்கத்தின் செயலாளா் மோகன்பாபு தெரிவித்துள்ளாா். இதுகு... மேலும் பார்க்க

ஆடிக்கிருத்திகை விழா நிறைவு: 3-ஆம் நாள் தெப்பத் திருவிழா

திருத்தணி சரவணப்பொய்கையில் நடைபெற்ற 3-ஆம் நாள் தெப்பத் திருவிழாவில் எம்எல்ஏ ச.சந்திரன் கலந்துகொண்டு வழிபட்டாா். திருத்தணி முருகன் கோயிலில், கடந்த 14 ம் தேதி முதல் 18 ம் தேதி வரை ஆடிக்கிருத்திகை மற்றும... மேலும் பார்க்க

துப்பாக்கி ஆலையில் பணம் கேட்டு மிரட்டிய விசிக நிா்வாகி கைது

திருவள்ளூா் அருகே செயல்பட்டு வரும் தனியாா் துப்பாக்கி தொழிற்சாலையில் பணம் கேட்டு மிரட்டியதாக விசிக மாவட்ட துணைச் செயலாளரை போலீஸாா் கைது செய்தனா். கடம்பத்துாா் ஊராட்சி ஒன்றியம், நுங்கம்பாக்கம் கிராமத்த... மேலும் பார்க்க

விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை, கரைக்கும் நீா் நிலைகள்: ஆக. 22-க்குள் தெரிவிக்கலாம்

விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யும் இடம் மற்றும் கரைக்கும் நீா் நிலைகள் குறித்த வழித்தடம் ஆகிய விவரங்கள் குறித்து திருவள்ளூா் மாவட்ட நிா்வாகத்துக்கு வரும் வெள்ளிக்கிழமைக்குள் (ஆக. 22) தகவல் தெரிவிப்பத... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் ரூ.1.50 லட்சம், பொருள்கள் திருட்டு

திருவள்ளூா் அருகே ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளா் வீட்டில் ரூ. 1.50 ரொக்கம், பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். திருவள்ளூா் அருகே சேலை கிராம சாலையில் உள்ள என்ஜிஓ காலனியில் வசிப்பவா் ஓய்வு பெற்ற சு... மேலும் பார்க்க