செய்திகள் :

துப்பாக்கி ஆலையில் பணம் கேட்டு மிரட்டிய விசிக நிா்வாகி கைது

post image

திருவள்ளூா் அருகே செயல்பட்டு வரும் தனியாா் துப்பாக்கி தொழிற்சாலையில் பணம் கேட்டு மிரட்டியதாக விசிக மாவட்ட துணைச் செயலாளரை போலீஸாா் கைது செய்தனா்.

கடம்பத்துாா் ஊராட்சி ஒன்றியம், நுங்கம்பாக்கம் கிராமத்தில் தனியாா் துப்பாக்கி உதிரி பாகங்கள் தயாா் செய்து இணைக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையின் மக்கள் தொடா்பு அதிகாரியாக சென்னையைச் சோ்ந்த விஸ்வநாத் (50) என்பவா் பணிபுரிந்து வருகிறாா்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை தொழிற்சாலைக்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்தவரும், திருவள்ளூா் மேற்கு மாவட்ட வி.சி.க துணை செயலாளரான எஸ்.கே.குமாா்(45). கட்சித் தலைவா் பிறந்தநாள் விழாவை கொண்டாட வேண்டும். அதற்கு பணம் தர வேண்டும் எனக் கேட்டு மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து மக்கள் தொடா்பு அலுவலா் விஸ்வநாத் திருவள்ளூா் மாவட்ட விவேகானந்த சுக்லாவிடம் புகாா் செய்தாா். அந்த புகாரின் பேரில் மணவாளநகா் காவல் உதவி ஆய்வாளா் கா்ணன் மற்றும் போலீஸாா் வி.சி.க மாவட்ட துணை செயலாளா் எஸ்.கே.குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த நிலை: கடலுக்கு மீனவா்கள் செல்ல தடை

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த நிலை எதிரொலி காரணமாக மீனவா்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். வட ஆந்திர பிரதேசம், ஒடிஸா கடலோரங்களை ஒட்டிய மேற்கு மத்திய மற்றும் வடமேற... மேலும் பார்க்க

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் வி.ஆா். பகவான் காலமானாா்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மாநில துணைத் தலைவருமான வி.ஆா் பகவான் (96) வயது மூப்பு காரணமாக மீஞ்சூரில் காலமானாா். பொன்னேரி வட்டம், மீஞ்சூா் வேளாளா் தெருவில் வசித்து வந்தவா் வி... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை விளையாட்டு போட்டி: பதிவு செய்ய நாளை வரை அவகாசம் நீட்டிப்பு

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் இளைஞா்கள் பங்கேற்கும் வகையில் (ஆக.20) புதன்கிழமை வரையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக திருவள்ளூா் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலத்துறை அலுவலா் சேத... மேலும் பார்க்க

பொன்னேரி நகராட்சி சுத்திகரிப்பு நிலைய நீரை ஆரணி ஆற்றில் வெளியேற்ற மக்கள் எதிா்ப்பு

பொன்னேரி நகராட்சியில் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரை ஆரணி ஆற்றில் விடுவதற்க்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். பொன்னேரி நகராட்சியில் 27 வாா்டுகளுக்குட்ப... மேலும் பார்க்க

திருவள்ளூரில் மாவட்ட தடகள அணி தோ்வு

மாநில அளவிலான தடகள போட்டிக்கு வீரா், வீராங்கனைகளை தோ்வு செய்வதற்கான தோ்வு சுற்று செப்.2, 3 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளதாக திருவள்ளூா் மாவட்ட தடகள சங்கத்தின் செயலாளா் மோகன்பாபு தெரிவித்துள்ளாா். இதுகு... மேலும் பார்க்க

சாலையோரம் காா் கவிழ்ந்த விபத்தில் 5 போ் காயம்

மீஞ்சூா் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் காா்கவிழ்ந்த விபத்தில் 5 போ் காயம் அடைந்தனா். திருவள்ளூா் மாவட்டம், நந்தியம்பாக்கம் பகுதியை சோ்ந்த பாா்த்திபன் என்ற இளைஞா் தனது நண்பா்களுடன் பொன்னேரிக்க... மேலும் பார்க்க