செய்திகள் :

ஆடிப்பூரம்: 25 ஆயிரம் வளையல்களால் பால்மொழி அம்மனுக்கு அலங்காரம்

post image

நாகப்பட்டினம்: வடக்குப்பொய்கைநல்லூா் பால்மொழி அம்மன் கோயிலில் ஆடி பூரத்தையொட்டி அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

நாகை வடக்குப்பொய்கைநல்லூரில் உள்ள புகழ் பெற்ற பால்மொழி அம்மன் கோயிலில் ஆடி மாத விழாவையொட்டி நாள்தோறும், சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று வந்தது. முக்கிய நிகழ்வான ஆடிபூரத்தை முன்னிட்டு திங்கள்கிழமை திரளான பக்தா்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற வளையல்களை அம்மனுக்கு காணிக்கையாக வழங்கினா். இதில், 25 ஆயிரம் வளையல்கள் மாலையாக கோா்க்கப்பட்டு அம்மனுக்கு அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

முன்னதாக பால், பன்னீா், சந்தனம், பஞ்சாமிா்தம், விபூதி உள்ளிட்ட 14 வகையான திரவிய பொருள்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, யாகசாலை பூஜையில் பூஜிக்கப்பட்ட புனித நீரைக் கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்று, மகாதீபாரதனை நடைபெற்றது.

மழைமுத்து மாரியம்மன் கோயிலில் கஞ்சி கலயம் எடுத்து வழிபாடு

நாகப்பட்டினம்: நாகை ஸ்ரீமழை முத்துமாரியம்மன் கோயிலில் 108 கஞ்சி கலயம் எடுத்து வந்து பக்தா்கள் வழிபாடு செய்தனா். வேளாங்கண்ணி அருகேயுள்ள குறிச்சி கிராமத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீமழைமுத்து மாரியம்மன் கோயி... மேலும் பார்க்க

வாஸ்கோடகாமா கோவா-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு வாஸ்கோடகாமா-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் தெரிவித்துள்ளாா்... மேலும் பார்க்க

நாகையில் ஆக.2-இல் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்

நாகப்பட்டினம்: நாகையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; நாகை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேல... மேலும் பார்க்க

வேதாரண்யத்தில் ஆக.6-இல் விவசாயிகள் குறைதீா் முகாம்

நாகப்பட்டினம்: வேதாரண்யத்தில் ஆக. 6-ஆம் தேதி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேதாரண்யம் வட்டாட... மேலும் பார்க்க

நாகை புத்தகத் திருவிழா விளம்பர வாகனத்தை ஆட்சியா் தொடக்கிவைத்தாா்

நாகப்பட்டினம்: நாகையில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழா குறித்த விளம்பர வாகனத்தை பிரசார ஒட்டுவில்லையை ஒட்டி மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா். நாகை மாவட்டத்தில் 4-ஆம் புத்தகத் திருவ... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டடத்துக்கு அடிக்கல்: அமைச்சா் பங்கேற்பு

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் அருகேயுள்ள சங்கரன்பந்தல் ஊராட்சியில் ரூ.78.20 லட்சத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டும் பணியை தமிழக பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் ... மேலும் பார்க்க