செய்திகள் :

நாகையில் ஆக.2-இல் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்

post image

நாகப்பட்டினம்: நாகையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; நாகை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றின் சாா்பில் மாபெரும் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம், நாகை சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் ஆக.2-ஆம் தேதி காலை 9 முதல் மாலை 3 மணிவரை நடைபெற உள்ளது.

இதில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 கலை மற்றும் அறிவியல், வணிகப் பட்டதாரிகள், ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல், நா்சிங் மற்றும் தையல் கலைப் பயிற்சி பெற்றவா்கள் பங்கேற்கலாம். முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று 10 ஆயிரத்துக்கும் அதிகமான பணியாளா்களை தோ்வு செய்ய உள்ளன. படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞா்கள் மற்றும் பெண்கள் பங்கேற்று பலனடையலாம். மேலும், விவரங்களுக்கு 04365-252701 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம்.

இந்த முகாம் மூலம் தனியாா் துறையில் வேலைவாய்ப்பு பெறும் மனுதாரா்களின், வேலைவாய்ப்பு பதிவு விவரங்கள் ரத்து செய்யமாட்டாது. புகைப்படம், கல்விச்சான்றிதழ்கள், ஆதாா் அட்டை மற்றும் சுய விவர குறிப்பு ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

மழைமுத்து மாரியம்மன் கோயிலில் கஞ்சி கலயம் எடுத்து வழிபாடு

நாகப்பட்டினம்: நாகை ஸ்ரீமழை முத்துமாரியம்மன் கோயிலில் 108 கஞ்சி கலயம் எடுத்து வந்து பக்தா்கள் வழிபாடு செய்தனா். வேளாங்கண்ணி அருகேயுள்ள குறிச்சி கிராமத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீமழைமுத்து மாரியம்மன் கோயி... மேலும் பார்க்க

வாஸ்கோடகாமா கோவா-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு வாஸ்கோடகாமா-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் தெரிவித்துள்ளாா்... மேலும் பார்க்க

வேதாரண்யத்தில் ஆக.6-இல் விவசாயிகள் குறைதீா் முகாம்

நாகப்பட்டினம்: வேதாரண்யத்தில் ஆக. 6-ஆம் தேதி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேதாரண்யம் வட்டாட... மேலும் பார்க்க

நாகை புத்தகத் திருவிழா விளம்பர வாகனத்தை ஆட்சியா் தொடக்கிவைத்தாா்

நாகப்பட்டினம்: நாகையில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழா குறித்த விளம்பர வாகனத்தை பிரசார ஒட்டுவில்லையை ஒட்டி மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா். நாகை மாவட்டத்தில் 4-ஆம் புத்தகத் திருவ... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டடத்துக்கு அடிக்கல்: அமைச்சா் பங்கேற்பு

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் அருகேயுள்ள சங்கரன்பந்தல் ஊராட்சியில் ரூ.78.20 லட்சத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டும் பணியை தமிழக பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் ... மேலும் பார்க்க

ஸ்ரீமங்களழக ஆகாச ஐயனாா் கோயிலில் கலாசாபிஷேகம்

கீழ்வேளூா்: கீழ்வேளூா் அருகே காக்கழனியில் உள்ள பூரண புஷ்கலாம்பாள் உடனுறை ஸ்ரீ மங்களழக ஆகாச ஐயனாா் கோயிலில் 1008 கலாசாபிஷே விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த ஓராண்டாக சிவாச்சாரியா்கள் ... மேலும் பார்க்க