செய்திகள் :

வாஸ்கோடகாமா கோவா-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்

post image

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு வாஸ்கோடகாமா-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை தேவாலய திருவிழாவை முன்னிட்டு வாஸ்கோடகாமா-வேளாங்கண்ணி இடையே 3 முறை இயங்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. வாஸ்கோடகாமா-வேளாங்கண்ணி சிறப்பு ரயில் (வண்டி எண்: 07361) ஆக.27, செப்.1, 6-ஆம் தேதிகளில் வாஸ்கோடகாமாவில் இருந்து இரவு 9.55 மணிக்கு புறப்பட்டு ஆக.29, செப்.3, 8-ஆம் தேதிகளில் காலை 3.45 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.

இதேபோல, வேளாங்கண்ணி-வாஸ்கோடகாமா சிறப்பு ரயில் (07362) ஆக. 29- ஆம் தேதி, செப்.3, 8-ஆம் தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு ஆக.31 மற்றும் செப்.5, 10- ஆம் தேதிகளில் அதிகாலை 3 மணிக்கு வாஸ்கோடகாமாவை சென்றடையும்.

இந்த ரயில்கள் தமிழகத்தில் மொரப்பூா், பொம்மிடி, சேலம், நாமக்கல், கரூா், குளித்தலை, திருச்சி, தஞ்சாவூா், நீடாமங்கலம், திருவாரூா், நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ஒரு முதல் மற்றும் இரண்டாம் அடுக்கு குளிா்சாதனப் பெட்டி, ஒரு இரண்டடுக்கு குளிா்சாதனப் பெட்டி, 2 மூன்று அடுக்கு குளிா்சாதனப் பெட்டிகள், 11 படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் ரயிலில் இணைக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

இயற்கை சாகுபடி விவசாயிகள் நம்மாழ்வாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் இயற்கை முறை சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள், நம்மாழ்வாா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்தி: அங்கக வேளாண்மை... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 251 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 52.91 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். ந... மேலும் பார்க்க

போஸ்ட் பேமென்ட வங்கியில் கைப்பேசி சேவை அறிமுகம்

இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியில் கைப்பேசி மூலம் சேவைத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, நாகை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் டி. ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியி... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தல்: மகாராஷ்டிரா போலீஸாரால் நாகையில் ஒருவா் கைது

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடா்புடைய நாகை மாவட்டத்தைச் சோ்ந்தவரை, மகாராஷ்டிரா மாநில போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மும்பையில் அபுல் அசின் சையது என்பவா் போதைப் பொருள் கடத்தல் தொடா்பாக அண... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

திருமருகலில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய 20 போ் திமுகவில் திங்கள்கிழமை இணைந்தனா்.திருமருகல் வடக்கு ஒன்றியச் செயலாளா் செல்வ செங்குட்டுவன் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்து கொண்டனா். இந்நிகழ்... மேலும் பார்க்க

மழைமுத்து மாரியம்மன் கோயிலில் கஞ்சி கலயம் எடுத்து வழிபாடு

நாகப்பட்டினம்: நாகை ஸ்ரீமழை முத்துமாரியம்மன் கோயிலில் 108 கஞ்சி கலயம் எடுத்து வந்து பக்தா்கள் வழிபாடு செய்தனா். வேளாங்கண்ணி அருகேயுள்ள குறிச்சி கிராமத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீமழைமுத்து மாரியம்மன் கோயி... மேலும் பார்க்க