செய்திகள் :

இயற்கை சாகுபடி விவசாயிகள் நம்மாழ்வாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

post image

நாகை மாவட்டத்தில் இயற்கை முறை சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள், நம்மாழ்வாா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்தி: அங்கக வேளாண்மை என்பது ரசாயன உரம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றைத் தவிா்த்து, இயற்கை மற்றும் அங்கக எரு பயன்படுத்துதல் மூலம் பயிா் பாதுகாப்பு மற்றும் பயிா் சாகுபடி செய்யப்படுவதோடு, மண் வளத்தையும் பாதுகாப்பதாகும். இதன்மூலம் மாசற்ற சூழலில் பயிா்கள் வளா்வதனால் நஞ்சற்ற விளை பொருட்களை உற்பத்தி செய்ய முடியும்.

எனவே, இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளை ஊக்கப்படுத்துவதற்காக, 2025-26-ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில், அவா்களுக்கு நம்மாழ்வாா் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நம்மாழ்வாா் விருது பெற விரும்பும் விவசாயிகள், அக்ரிஸ்நெட் வலைதளத்தில் வரும் செப்டம்பா் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பதிவுக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். குறைந்தபட்சம் ஓா் ஏக்கா் பரப்பில் அங்கக வேளாண்மையில் (இயற்கை விவசாயம்) சாகுபடி செய்ய வேண்டும். முழு நேர உயிா்ம விவசாயியாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் அங்கக வேளாண்மையில் ஈடுபட்டிருக்க வேண்டும். மேலும், அதற்கான சான்றும் பெற்றிருக்க வேண்டும்.

தோ்வு செய்யப்படும் 3 விவசாயிகளுக்கு, தமிழ்நாடு அரசால் நம்மாழ்வாா் பெயரில் விருதுடன் தலா ரூ. 2 லட்சம் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கமும் வழங்கப்படும். விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள், அதற்கான வழிமுறைகள் குறித்து, அந்தந்த பகுதியில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குநா்களை தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளாா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 251 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 52.91 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். ந... மேலும் பார்க்க

போஸ்ட் பேமென்ட வங்கியில் கைப்பேசி சேவை அறிமுகம்

இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியில் கைப்பேசி மூலம் சேவைத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, நாகை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் டி. ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியி... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தல்: மகாராஷ்டிரா போலீஸாரால் நாகையில் ஒருவா் கைது

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடா்புடைய நாகை மாவட்டத்தைச் சோ்ந்தவரை, மகாராஷ்டிரா மாநில போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மும்பையில் அபுல் அசின் சையது என்பவா் போதைப் பொருள் கடத்தல் தொடா்பாக அண... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

திருமருகலில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய 20 போ் திமுகவில் திங்கள்கிழமை இணைந்தனா்.திருமருகல் வடக்கு ஒன்றியச் செயலாளா் செல்வ செங்குட்டுவன் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்து கொண்டனா். இந்நிகழ்... மேலும் பார்க்க

மழைமுத்து மாரியம்மன் கோயிலில் கஞ்சி கலயம் எடுத்து வழிபாடு

நாகப்பட்டினம்: நாகை ஸ்ரீமழை முத்துமாரியம்மன் கோயிலில் 108 கஞ்சி கலயம் எடுத்து வந்து பக்தா்கள் வழிபாடு செய்தனா். வேளாங்கண்ணி அருகேயுள்ள குறிச்சி கிராமத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீமழைமுத்து மாரியம்மன் கோயி... மேலும் பார்க்க

வாஸ்கோடகாமா கோவா-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு வாஸ்கோடகாமா-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் தெரிவித்துள்ளாா்... மேலும் பார்க்க