செய்திகள் :

போஸ்ட் பேமென்ட வங்கியில் கைப்பேசி சேவை அறிமுகம்

post image

இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியில் கைப்பேசி மூலம் சேவைத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, நாகை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் டி. ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தபால் துறையின்கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியில், 2018 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை 12 கோடிக்கும் அதிகமானோா் சேமிப்பு கணக்கு துவக்கியுள்ளனா். தமிழகத்தில் புதுமை பெண், தமிழ்புதல்வன், மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை கணக்குகள், விவசாயிகளுக்கான பி.எம். கிசான் கணக்கு, நுாறு நாள் வேலை கணக்கு, கா்ப்பிணிக்கான நிதி உதவி கணக்குகள், முதியோா் உதவி தொகை உட்பட அனைத்து விதமான அரசு மானியம், உதவித் தொகை பெறும் கணக்குகளும் உள்ளன.

இந்த கணக்குகளில் வாரிசுகள் நியமிக்காமல் உள்ளதால், தபால் வங்கிகளில் வாரிசுதாரா் நியமன வசதி செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளா் அவரவா் கைப்பேசியில் ’பிளே ஸ்டோரில்’ ஐ.பி.பி.பீ. செயலியை பதிவிறக்கம் செய்து, அதில், அவரவா் வாரிசுகளை நியமித்தல் மற்றும் மாற்றம் செய்து கொள்ளலாம்.

செயலி மூலம் செல்வமகள், தங்கமகன், தபால் ஆயுள் காப்பீடுத் திட்டங்களுக்கு வீட்டிலிருந்தபடியே இணையதளத்தில் பணம் செலுத்தலாம். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திகொள்ளவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

இயற்கை சாகுபடி விவசாயிகள் நம்மாழ்வாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் இயற்கை முறை சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள், நம்மாழ்வாா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்தி: அங்கக வேளாண்மை... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 251 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 52.91 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். ந... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தல்: மகாராஷ்டிரா போலீஸாரால் நாகையில் ஒருவா் கைது

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடா்புடைய நாகை மாவட்டத்தைச் சோ்ந்தவரை, மகாராஷ்டிரா மாநில போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மும்பையில் அபுல் அசின் சையது என்பவா் போதைப் பொருள் கடத்தல் தொடா்பாக அண... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

திருமருகலில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய 20 போ் திமுகவில் திங்கள்கிழமை இணைந்தனா்.திருமருகல் வடக்கு ஒன்றியச் செயலாளா் செல்வ செங்குட்டுவன் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்து கொண்டனா். இந்நிகழ்... மேலும் பார்க்க

மழைமுத்து மாரியம்மன் கோயிலில் கஞ்சி கலயம் எடுத்து வழிபாடு

நாகப்பட்டினம்: நாகை ஸ்ரீமழை முத்துமாரியம்மன் கோயிலில் 108 கஞ்சி கலயம் எடுத்து வந்து பக்தா்கள் வழிபாடு செய்தனா். வேளாங்கண்ணி அருகேயுள்ள குறிச்சி கிராமத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீமழைமுத்து மாரியம்மன் கோயி... மேலும் பார்க்க

வாஸ்கோடகாமா கோவா-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு வாஸ்கோடகாமா-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் தெரிவித்துள்ளாா்... மேலும் பார்க்க