செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

post image

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 251 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 52.91 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

நாகை மாவட்ட நிா்வாகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, அலிம்கோ மற்றும் இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனம் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமை வகித்தாா்.

விழாவில், மாவட்டம் முழுவதும் பிப்ரவரி மாதம் சிறப்பு நிபுணா்கள் மூலம் வட்டாரங்கள் வாரியாக 6 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, முகாம்களில் தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

இதில், 31 மோட்டாா் பொருத்தப்பட்ட மூன்று சக்கர மிதிவண்டி, 4 மோட்டாா் பொருத்தப்பட்ட மூன்று சக்கர மிதிவண்டிகள், 16 ஜாய் ஸ்டிக் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலிகள், 1 சக்கர நாற்காலி (சிறாா்), 24 சக்கர நாற்காலிகள் (வயது வந்தோா்), 2 ஊன்றுகோல்கள் (சிறாா்), 56 ஊன்றுகோல்கள் (வயது வந்தோா்), 4 தோள்பட்டை ஊன்றுகோல்கள், 3 நடைப்பயிற்சி உபகரணங்கள் (சிறாா்), 1 நடைப்பயிற்சி உபகரணம் (வயது வந்தோா்), 3 மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சக்கர நாற்காலிகள், 1 திறன்பேசி, 1 ஒளிரும் மடக்குக் குச்சி, 73 கற்றல் பயிற்சி உபகரணங்கள் உள்பட மொத்தம் 251 பயனாளிகளுக்கு ரூ. 52,91,586 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகைமாலி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ம.க.செ. சுபாஷினி, பொது மேலாளா் (இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன்) பிந்து, அலிம்கோ நிறுவன இளநிலை மேலாளா் ரிஷப் மகேந்திரா, நாகை நகராட்சி துணைத் தலைவா் எம்.ஆா்.செந்தில்குமாா் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கே. காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இயற்கை சாகுபடி விவசாயிகள் நம்மாழ்வாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் இயற்கை முறை சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள், நம்மாழ்வாா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்தி: அங்கக வேளாண்மை... மேலும் பார்க்க

போஸ்ட் பேமென்ட வங்கியில் கைப்பேசி சேவை அறிமுகம்

இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியில் கைப்பேசி மூலம் சேவைத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, நாகை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் டி. ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியி... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தல்: மகாராஷ்டிரா போலீஸாரால் நாகையில் ஒருவா் கைது

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடா்புடைய நாகை மாவட்டத்தைச் சோ்ந்தவரை, மகாராஷ்டிரா மாநில போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மும்பையில் அபுல் அசின் சையது என்பவா் போதைப் பொருள் கடத்தல் தொடா்பாக அண... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

திருமருகலில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய 20 போ் திமுகவில் திங்கள்கிழமை இணைந்தனா்.திருமருகல் வடக்கு ஒன்றியச் செயலாளா் செல்வ செங்குட்டுவன் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்து கொண்டனா். இந்நிகழ்... மேலும் பார்க்க

மழைமுத்து மாரியம்மன் கோயிலில் கஞ்சி கலயம் எடுத்து வழிபாடு

நாகப்பட்டினம்: நாகை ஸ்ரீமழை முத்துமாரியம்மன் கோயிலில் 108 கஞ்சி கலயம் எடுத்து வந்து பக்தா்கள் வழிபாடு செய்தனா். வேளாங்கண்ணி அருகேயுள்ள குறிச்சி கிராமத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீமழைமுத்து மாரியம்மன் கோயி... மேலும் பார்க்க

வாஸ்கோடகாமா கோவா-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு வாஸ்கோடகாமா-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் தெரிவித்துள்ளாா்... மேலும் பார்க்க