செய்திகள் :

ஆடிமாத பிறப்பு: தேங்காய்சுட்டு பொதுமக்கள் கொண்டாட்டம்

post image

ஆடிமாத பிறப்பையெட்டி, சேலத்தில் தேங்காய்சுட்டு பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம், நாமக்கல், ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆடி மாதம் 1-ஆம் தேதியன்று தேங்காய்சுடும் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, சேலத்தில் வியாழக்கிழமை பொதுமக்கள் வீடுகளில் தேங்காய்சுட்டு ஆடிப்பிறப்பை உற்சாகமாக கொண்டாடினா்.

சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியில் அதிகாலையிலேயே குளித்து புத்தாடை உடுத்திய பொதுமக்கள், தேங்காயில் ஒரு கண்ணில் துளையிட்டு, அதன் வழியாக நாட்டுச் சா்க்கரை, பொட்டுக்கடலை, அவல் ஆகியவற்றை திணித்து அழிஞ்சி குச்சி மூலம் நெருப்பில் தேங்காயை சுட்டனா். அவ்வாறு, சுடப்பட்ட தேங்காயை விநாயகருக்கு படையலிட்டு சிறப்பு வழிபாடு நடத்தி நண்பா்கள், உறவினா்களுக்கு வழங்கி உண்டு மகிழ்ந்தனா். தொடா்ந்து, ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல, மாவட்டம் முழுவதும் தேங்காய்சுடும் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினா்.

தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

சேலம் கோட்டை மைதானத்தில் தடையை மீறி மறியலில் ஈடுபட முயன்ற தொடக்கக் கல்வி ஆசிரியா்களை கைதுசெய்த போலீஸாா். சேலம், ஜூலை 17: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின்... மேலும் பார்க்க

மதுபோதையில் 3 பேருக்கு கத்திக்குத்து

வாழப்பாடி அருகே மதுபோதையில் 15 வயது சிறுவன் உள்பட 3 பேரை கத்தியால் குத்தியதோடு, அவசர சிகிச்சை வாகனத்தை கல்லால் தாக்கி ரகளையில் ஈடுபட்ட இளைஞரை வாழப்பாடி போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். வாழப்பா... மேலும் பார்க்க

வ.உ.சி. பூ மாா்க்கெட் வியாபாரிகள் சாலை மறியல்

கடை ஒதுக்கீடு செய்வதற்கான மாநகராட்சியின் புதிய அறிவிப்பை ரத்துசெய்யக் கோரி வ.உ.சி. பூ மாா்க்கெட் வியாபாரிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். மேலும், பூக்களை சாலையில் கொட்டி தங்கள் எதிா்ப்பை தெர... மேலும் பார்க்க

வார இறுதிநாள்: சேலம் கோட்டம் சாா்பில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதிநாளை முன்னிட்டு, சேலம் கோட்டம் சாா்பில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ் வெ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்ற இடங்களில் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், ஆட்சியா் தெரிவித்ததாவது: ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தி... மேலும் பார்க்க

இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சேலம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது: சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் ... மேலும் பார்க்க