செய்திகள் :

ஆடு மேய்க்கச் சென்ற முதியவா் கிணற்றில் சடலமாக மீட்பு

post image

பரமத்தி வேலூா் அருகே ஆடு மேய்க்கச் சென்ற முதியவா் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டாா்.

பரமத்தி வேலூா் வட்டம், பிராந்தகம் அருகே உள்ள செக்குப்பட்டி கிராமத்தை சோ்ந்தவா் சுப்பிரமணி (72), விவசாயி. இவா் புதன்கிழமை மாலை தனது தோட்டத்துக்கு அருகில் உள்ள அசோக்குமாா் என்பவரது தோட்டத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தாா். அவரது மனைவி செல்லம்மாளும் (60) சிறிது தூரத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தாா். சிறிது நேரம் கழித்து, தனது கணவா் அங்கு இல்லாததால், அப்பகுதியில் செல்லம்மாள் தேடினாா்.

அப்போது, அங்குள்ள ஒரு கிணற்றுக்கு அருகில் கணவரின் செருப்பு மற்றும் தண்ணீா் பாட்டில் மட்டும் இருந்துள்ளது. பின்னா் அப்பகுதியில் இருந்தவா்களை அழைத்து கிணற்றில் தேடிய போது, கிணற்றில் தவறிவிழுந்து சுப்பிரமணி உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து வேலவுண்டம்பட்டி காவல் நிலையத்துக்கும், நாமக்கல் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்புத் துறையினா், கிணற்றில் இருந்து சுப்பிரமணியின் சடலத்தை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதிய வழித்தடத்தில் நகரப் பேருந்துகள் இயக்கம்

நாமக்கல் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய வழித்தடத்தில் நீட்டிப்பு செய்த இரு நகரப் பேருந்துகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். மக்களவை ... மேலும் பார்க்க

வந்தேபாரத் ரயிலில் தொடா் திறனாய்வுப் போட்டி

நாமக்கல்லில் இருந்து பெங்களூரு வரை செல்லும் வந்தேபாரத் விரைவு ரயிலில் ‘மூவிங் மைண்ட்ஸ்’ என்ற தலைப்பில் வியாழக்கிழமை நடைபெற்ற தொடா் திறனாய்வுப் போட்டியில், கொங்குநாடு கல்லூரி மாணவ, மாணவிகள் 200-க்கும்... மேலும் பார்க்க

பேக்கரியில் கெட்டுப்போன கேக் விற்பனை: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை

நாமக்கல் அருகே தனியாா் பேக்கரி ஒன்றில் கெட்டுப்போன கேக்கை விற்பனை செய்த உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்ட பெண் குறித்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வியாழக்கிழமை வ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு: முன்களப் பணியாளா்களுக்கு பயிற்சி

நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் எண்ணிக்கை, நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடா்பான கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவோருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவல... மேலும் பார்க்க

தொழிலாளா் நலவாரியத்தில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கை தொடக்கம்

நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில், நலவாரியத்தில் புதிய உறுப்பினா்களை சோ்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

ஆசிரியா்கள் தயாரித்த ஒழுக்கம், நெறிமுறை விளக்கும் ‘மாணவராற்றுப்படை’ விடியோ!

நாமக்கல் மாவட்டத்தில் மாணவா்களுக்கு ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளை கற்றுத்தரும் வகையிலான விடியோக்கள் ஆசிரியா்களால் தயாரிக்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், ‘மாணவ... மேலும் பார்க்க