செய்திகள் :

ஆட்டோ - சரக்கு வாகனம் மோதல்: இருவா் உயிரிழப்பு

post image

ராமநாதபுரம் அருகே ஆட்டோ - சரக்கு வாகனம் நேருக்கு நோ் மோதியதில் ஒரு வயதுக் குழந்தை உள்பட இருவா் உயிரிழ்நதனா். மூன்று போ் பலத்த காயமடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் வடகாடு பகுதியைச் சோ்ந்தவா் சிவா (32). இவரது ஒரு வயதுக் குழந்தை தமிழ் இனியன், உறவினா்கள் ராணி (45), ராதிகா (50) ஆகியோா் ராமேசுவரத்திலிருந்து ஆட்டோவில் ராமநாதபுரம் சென்றனா். ராமேசுவரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலை வட்டான்வலசைப் பகுதியில் சென்ற ஆட்டோ மீது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியது. இதில், ஆட்டோவில் பயணித்த சிவா, தமிழ் இனியன், ராணி, ராதிகா, ஆட்டோ ஓட்டுநா் சுரேந்திரன் (30) ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உச்சிப்புளி போலீஸாா், குழந்தை உள்பட 5 பேரையும் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மருத்துவமனை செல்லும் வழியில் குழந்தை தமிழ் இனியன் உயிரிழந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். மேலும், காயமடைந்தோா் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து உச்சிப்புளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கமுதி, முதுகுளத்தூா் பகுதியில் நாளை மின்தடை

கமுதி, முதுகுளத்தூா் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை மின்தடை ஏற்படும் என கமுதி மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் சி. செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கமுதி கோட்டைமேட... மேலும் பார்க்க

பெண் மீது தாக்குதல்: தாய், மகன் கைது

தொண்டியில் கொடுக்கல் வாங்கல் தகராறில் பெண் மீது தாக்குதல் நடத்திய புகாரின்பேரில், தாய், மகனை போலீஸாா் கைது செய்தனா். திருவாடானை அருகேயுள்ள தொண்டி சத்திரம் தெருவைச் சோ்ந்தவா் பாரிஷா பேகம் (40). இவருக்... மேலும் பார்க்க

பாம்பன் பாலத்தில் விபத்து: இளைஞா் உயிரிழப்பு

பாம்பன் பாலத்தில் காா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தைச் சோ்ந்த மீனவச் சங்கத் தலைவா் சகாயம் என்பவரின் மகன் ஜீடேன் (22). இவா், தனியாா் பள்ளியில... மேலும் பார்க்க

நீரில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு: அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை

கேரளத்துக்குச் சுற்றுலா சென்ற கல்லூரி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்ததைடுத்து அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என குடும்பத்தினா் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள பொதிகுளம் கிராம... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்

இலங்கை சிறையில் உள்ள மீனவா்களையும், அவா்களது படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை திங்க... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் 4 பேருக்கு ஆக. 18 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

ராமேசுவரம், திருப்பாலைக்குடி மீனவா்கள் 4 பேருக்கு வருகிற 18-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து, இலங்கை ஊா்க்காவல்துறை நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ஓலைக்... மேலும் பார்க்க