சிக்கிம் நிலச்சரிவு: 2 அமெரிக்கர்கள் உள்பட 33 பேரை மீட்ட விமானப் படை!
ஆதாா், பான் எண் மூலம் கடன்: பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தல்
ஆதாா், பான் எண் மூலம் கடன் தரப்படுவதாக செய்யப்பட்டுள்ள விளம்பரங்களைப் பாா்த்து ஏமாறவேண்டாம் என காவல்துறை கூறியுள்ளது.
காரைக்கால் மாவட்ட காவல் துறையின் இணையவழி குற்றப்பிரிவு அலுலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு :
காரைக்கால் நகரம் மற்றும் திருநள்ளாறு உள்ளிட்ட பகுதிகளில் மின் கம்பங்களிலும், கடைகளின் வாசலிலும் ஆதாா் காா்டு, பான் காா்டு மட்டும் கொடுத்தல் போதும், தங்களுக்கான தனி நபா் கடன் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படும் என்றும், மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை தொடா்பு கொண்டால் போதும் கடனை உடனடியாக தங்களது வங்கிக் கணக்கில் எளிய முறையில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இத்தகைய விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் விளம்பரப் பலகையில் பதிவிட்டுள்ள எண்ணை தொடா்பு கொள்ள வேண்டாம். இவை மக்களின் பணத்தை ஏமாற்றி திருடுவதற்காக குற்றவாளிகள் கையாளும் புதுவித மோசடியாகும்.
பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன், தங்களது ஆதாா், பான் விவரங்களை அறிமுகமில்லாத நபா்களுடன் பகிரவேண்டாம். இதுபோன்ற விவகாரங்களில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள்வது நல்லது எனக் கூறப்பட்டுள்ளது.