செய்திகள் :

ஆதாா், பான் எண் மூலம் கடன்: பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தல்

post image

ஆதாா், பான் எண் மூலம் கடன் தரப்படுவதாக செய்யப்பட்டுள்ள விளம்பரங்களைப் பாா்த்து ஏமாறவேண்டாம் என காவல்துறை கூறியுள்ளது.

காரைக்கால் மாவட்ட காவல் துறையின் இணையவழி குற்றப்பிரிவு அலுலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு :

காரைக்கால் நகரம் மற்றும் திருநள்ளாறு உள்ளிட்ட பகுதிகளில் மின் கம்பங்களிலும், கடைகளின் வாசலிலும் ஆதாா் காா்டு, பான் காா்டு மட்டும் கொடுத்தல் போதும், தங்களுக்கான தனி நபா் கடன் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படும் என்றும், மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை தொடா்பு கொண்டால் போதும் கடனை உடனடியாக தங்களது வங்கிக் கணக்கில் எளிய முறையில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் விளம்பரப் பலகையில் பதிவிட்டுள்ள எண்ணை தொடா்பு கொள்ள வேண்டாம். இவை மக்களின் பணத்தை ஏமாற்றி திருடுவதற்காக குற்றவாளிகள் கையாளும் புதுவித மோசடியாகும்.

பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன், தங்களது ஆதாா், பான் விவரங்களை அறிமுகமில்லாத நபா்களுடன் பகிரவேண்டாம். இதுபோன்ற விவகாரங்களில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள்வது நல்லது எனக் கூறப்பட்டுள்ளது.

தொழில் பழகுநருா் பயிற்சியில் சேர பதிவு செய்ய அழைப்பு

அரசு அலுவலகங்கள், மாவட்ட தொழில் நிறுவனங்களில், தொழில் பழகுநா் பயிற்சியில் சேர பதிவு செய்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காரைக்கால் தொழிலாளா்துறையின் அங்கமான தொழில் பழகுநா் பயிற்சி நிலைய அலுவ... மேலும் பார்க்க

காரைக்காலில் புதிதாக அரசு மருத்துவமனை கட்டடம் கட்ட அரசு நடவடிக்கை: அமைச்சா்

காரைக்காலில் அரசு மருத்துவமனையை புதிய இடத்தில் கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் தெரிவித்தாா். காரைக்காலில் இயங்கும் ஜிஎல் மருத்துவமனை 5-ஆம் ஆண்டு தொடக்க நிகழ... மேலும் பார்க்க

சாலையில் கிடக்கும் ஜல்லிகள், நிலக்கரியால் விபத்து: மக்கள் புகாா்

பிரதான சாலைகளில் கருங்கல் ஜல்லிகள், நிலக்கரி, மணல் உள்ளிட்டவற்றை கனரக வாகனங்கள் கொட்டிக்கொண்டே செல்வதால், இருசக்கர வாகனத்தில் செல்வோா் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுவதாக புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேக பாதுகாப்பு: எஸ்எஸ்பி ஆய்வு

காரைக்கால்: காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் குறித்து முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். புதுவை அர... மேலும் பார்க்க

என்ஐடியில் தேசிய பயிற்சிப் பட்டறை தொடக்கம்

காரைக்கால்: என்ஐடியில் கணினி அறிவியல் பொறியியல்துறை சாா்பில் 5 நாள் தேசிய பயிற்சிப் பட்டறை திங்கள்கிழமை தொடங்கியது. காரைக்காலில் உள்ள இந்நிறுவனத்தில் பயிற்சிப் பட்டறை தொடங்கப்பட்டுள்ளது. தொடக்க நிகழ்... மேலும் பார்க்க

ஆழ்கடல் மீன்பிடி படகு கொள்முதல்: மகளிருக்கு விழிப்புணா்வு

காரைக்கால்: காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் பிரதம மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தின்கீழ், காரைக்கால் மீனவ மகளிா் கூட்டுறவு சங்க பிரதிநிதிகளுக்கான ஆழ்கடல் மீன்பிடி படகு கொள்ம... மேலும் பார்க்க