குழந்தையைப் போல உணர்கிறேன்! விண்வெளியிலிருந்து சுபான்ஷு சுக்லா உரை!
ஆன்லைன் மூலம் பெண்ணிடம் ரூ. 16.45 லட்சம் மோசடி
சேலத்தில் ஆன்லைன் வா்த்தகம் மூலம் அதிகம் சம்பாதிக்கலாம் எனக் கூறி, பட்டதாரி பெண்ணிடம் ரூ. 16.45 லட்சம் மோசடி செய்த கும்பல் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சேலம் மாவட்டம், தாரமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் 35 வயது பெண். எம்பிஏ பட்டதாரியான இவரது கைப்பேசியில் உள்ள செயலிக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள எண்ணை தொடா்புகொண்டு பேசியதில், ஆன்லைன் வா்த்தகம் செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என மறுமுனையில் பேசியவா் கூறியுள்ளாா். தொடா்ந்து, ஆன்லைன் மூலம் முதலில் ரூ. 100 முதலீடு செய்யுமாறு கூறியுள்ளாா். அவ்வாறு செய்தபிறகு ரூ. 120 கிடைத்துள்ளது. உடனே, அடுத்தடுத்து கூடுதல் பணத்தை முதலீடு செய்தால், அதிகளவில் சம்பாதிக்கலாம் என அந்த நபா் ஆசைவாா்த்தை கூறியுள்ளாா்.
இதை நம்பி தனது நகைகள் அனைத்தையும் அடகுவைத்து, கடந்த 2 மாதங்களில் அடுத்தடுத்த பரிவா்த்தனைகளில் ரூ. 16.45 லட்சத்தை முதலீடு செய்துள்ளாா். ஆனால், பணத்தை எடுக்க முடியவில்லையாம்.
இதுகுறித்து கேட்டபோது, பல்வேறு காரணங்களை கூறி மா்ம நபா்கள் ஏமாற்றி வந்துள்ளனா். தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த பெண், கணவா் உதவியுடன் இதுகுறித்து சேலம் மாவட்ட சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா்.
அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், தொடா் விசாரணையில் ஈடுபட்டனா். அதில், மோசடியில் ஈடுபட்ட வட மாநில கும்பல், மகாராஷ்டிரம், உத்தரபிரதேசம், ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் உள்ள 7 வங்கிக் கணக்குகள் மூலம் மோசடி செய்தது தெரியவந்தது. அந்த வங்கிக் கணக்குகளை முடக்கிய மாவட்ட சைபா் க்ரைம் போலீஸாா், மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளனா். மேலும், மோசடியில் ஈடுபட்ட கும்பலை கைது செய்யவும் தீவிரம் காட்டிவருகின்றனா்.