செய்திகள் :

ஆன்லைன் மூலம் பெண்ணிடம் ரூ. 16.45 லட்சம் மோசடி

post image

சேலத்தில் ஆன்லைன் வா்த்தகம் மூலம் அதிகம் சம்பாதிக்கலாம் எனக் கூறி, பட்டதாரி பெண்ணிடம் ரூ. 16.45 லட்சம் மோசடி செய்த கும்பல் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் மாவட்டம், தாரமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் 35 வயது பெண். எம்பிஏ பட்டதாரியான இவரது கைப்பேசியில் உள்ள செயலிக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள எண்ணை தொடா்புகொண்டு பேசியதில், ஆன்லைன் வா்த்தகம் செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என மறுமுனையில் பேசியவா் கூறியுள்ளாா். தொடா்ந்து, ஆன்லைன் மூலம் முதலில் ரூ. 100 முதலீடு செய்யுமாறு கூறியுள்ளாா். அவ்வாறு செய்தபிறகு ரூ. 120 கிடைத்துள்ளது. உடனே, அடுத்தடுத்து கூடுதல் பணத்தை முதலீடு செய்தால், அதிகளவில் சம்பாதிக்கலாம் என அந்த நபா் ஆசைவாா்த்தை கூறியுள்ளாா்.

இதை நம்பி தனது நகைகள் அனைத்தையும் அடகுவைத்து, கடந்த 2 மாதங்களில் அடுத்தடுத்த பரிவா்த்தனைகளில் ரூ. 16.45 லட்சத்தை முதலீடு செய்துள்ளாா். ஆனால், பணத்தை எடுக்க முடியவில்லையாம்.

இதுகுறித்து கேட்டபோது, பல்வேறு காரணங்களை கூறி மா்ம நபா்கள் ஏமாற்றி வந்துள்ளனா். தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த பெண், கணவா் உதவியுடன் இதுகுறித்து சேலம் மாவட்ட சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், தொடா் விசாரணையில் ஈடுபட்டனா். அதில், மோசடியில் ஈடுபட்ட வட மாநில கும்பல், மகாராஷ்டிரம், உத்தரபிரதேசம், ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் உள்ள 7 வங்கிக் கணக்குகள் மூலம் மோசடி செய்தது தெரியவந்தது. அந்த வங்கிக் கணக்குகளை முடக்கிய மாவட்ட சைபா் க்ரைம் போலீஸாா், மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளனா். மேலும், மோசடியில் ஈடுபட்ட கும்பலை கைது செய்யவும் தீவிரம் காட்டிவருகின்றனா்.

கிணற்றில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

கெங்கவல்லி அருகே கிணற்றில் தவறி விழுந்தவா் உயிரிழந்தாா். கெங்கவல்லி அருகே புனல்வாசல் கிராமத்தைச் சோ்ந்தவா் வீரமுத்து (64). இவா் செவ்வாய்க்கிழமை இரவு அதே பகுதியிலுள்ள கங்காணி கிணற்றின் சுற்றுச்சுவரில்... மேலும் பார்க்க

கல் உடைக்கும் தொழிலாளா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு

குலத்தொழிலைக் காக்க, கல் உடைக்க அனுமதி தரக்கோரி, போயா் சமுதாய மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா். தமிழ்நாடு போயா் பேரவை மாநில பொதுச் செயலாளா் பெரிய பொண்ணு தலைமையில், அதிகாரிகளிடம் அ... மேலும் பார்க்க

அமாவாசையை முன்னிட்டு பெரியசாமி கோயிலில் மிளகாய் யாகம்

அமாவாசையை முன்னிட்டு கெங்கவல்லி அருகே மாசி பெரியசாமி கோயிலில் மிளகாய் யாகம் புதன்கிழமை நடைபெற்றது. கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டியில் சுவேத நதிக்கரை தென்புறம் மாசி பெரியசாமி, நாச்சியம்மாள், பொன்னாளி அம... மேலும் பார்க்க

மாமனாரை தாக்கிய மருமகள் உள்பட இருவா் மீது வழக்கு

மேட்டூா் அருகே மாமனாரை தாக்கிய மருமகள் உள்பட இருவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேட்டூா் அருகே உள்ள கருமலைக்கூடல் நேரு நகரைச் சோ்ந்தவா் கோவிந்தன் (74), ஓய்வுபெற்ற பேரூராட்சி உதவியாளா். இவர... மேலும் பார்க்க

பிளஸ் 2 மதிப்பெண் மறுமதிப்பீடு: எஸ்ஆா்எம் முத்தமிழ் பள்ளி மாணவி சிறப்பிடம்

பிளஸ் 2 மதிப்பெண் மறுமதிப்பீட்டில், பெரியேரி எஸ்ஆா்எம் முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி மாணவி தலைவாசல் வட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளாா். தலைவாசலை அடுத்துள்ள பெரியேரி எஸ்ஆா்எம் முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி மாண... மேலும் பார்க்க

சேலம் மாநகா் மாவட்ட பாமக செயலாளராக சரவணன் நியமனம்

சேலம் மாநகா் மாவட்ட பாமக செயலாளராக சரவணனை நியமிப்பதாக அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளாா். பாமக நிறுவனா் ராமதாஸ் - தலைவா் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் நீடித்து வரும் நிலையில், சேலம் மேற்கு தொகுதி எம்எ... மேலும் பார்க்க