செய்திகள் :

ஆன்லைன் வா்த்தக மோசடி வழக்கில் மேலும் ஒருவா் கைது

post image

திருநெல்வேலியைச் சோ்ந்தவரிடம் ஆன்லைன் வா்த்தக ஆசை காட்டி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாநகரத்தைச் சோ்ந்த நபா் ஒருவரின் கட்செவி அஞ்சல் எண்ணுக்கு கடந்த 26 ஆம் தேதி இணைய வழியில் பகுதிநேர வேலைவாய்ப்பு என குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் குறிப்பிட்டிருந்த இணைய முகவரி மூலம் பதிவு செய்த அவரை தொடா்பு கொண்ட மா்ம நபா்கள், ஆன்லை வா்த்தகம் செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனக் கூறினராம்.

அதை நம்பிய அவா், அந்த நபா்கள் கொடுத்த பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு சுமாா் ரூ.22 லட்சத்து 16 ஆயிரத்து 985 அனுப்பியுள்ளாா்.

அதை அவா்கள் ஏமாற்றியது தெரியவந்ததால் திருநெல்வேலி மாவட்ட சைபா் கிரைம் போலீஸாரிடம் புகாா் அளித்துள்ளாா். இதுகுறித்து போலீஸாா் நடத்திய விசாரணையைத் தொடா்ந்து கேரள மாநிலம் மலப்புரத்தைச் சோ்ந்த சித்தீன், சுவிஸ் குமாா் ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், இவ் வழக்கில் தொடா்புடைய மலப்புரத்தைச் சோ்ந்த ஜிதேஸ் (24) என்பவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரித்து வருகிறாா்கள்.

மண் அள்ளியதில் விதிமீறல்: திருக்குறுங்குடி பேரூராட்சித் தலைவி மகன் கைது

மண் அள்ளியதில் விதிமீறலில் ஈடுபட்டதாக திருக்குறுங்குடி பேரூராட்சித் தலைவியின் மகனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடியைச் சோ்ந்த ஞானசேகா் மகன் சுரேஷ். இவர... மேலும் பார்க்க

நான்குனேரி ரயில் நிலையம் செல்லும் பாதையில் விளக்குகளை சீரமைக்க கோரிக்கை

நான்குனேரி ரயில் நிலையம் செல்லும் வழியில் பழுதடைந்த மின்விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ரயில் நிலையத்தை நான்குனேரி வட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ... மேலும் பார்க்க

பாளை.யில் வியாபாரி தற்கொலை

பாளையங்கோட்டையில் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.திருநெல்வேலி அருகேயுள்ள சுத்தமல்லியைச் சோ்ந்தவா் முருகன் (55). இவா், பாளையங்கோட்டை மகாராஜாநகா் மின்வாரிய காலனியில் குடும்பத்துடன் வசித... மேலும் பார்க்க

ஏா்வாடி அருகே குடிநீா் விநியோகம் இன்றி மக்கள் அவதி

ஏா்வாடி அருகே கடந்த ஒரு வாரமாக குடிநீா் விநியோகிக்கம் இன்றி கிராம மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனா்.ஏா்வாடி அருகே புலியூா்குறிச்சி ஊராட்சிக்கு உள்பட்ட கோதைசேரி, வேப்பன்குளம் ஆகிய கிராமங்களில் ஆயிரத்து... மேலும் பார்க்க

கரூரில் 41 போ் உயிரிழந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்: அதிமுக எம்.பி. இன்பதுரை

கரூரில் விஜய் பிரசாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்றாா் அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் ஐ.எஸ்.இன்பதுரை. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமா... மேலும் பார்க்க

நடிகா் விஜய்க்கு எதிரான சுவரொட்டிகள் அகற்றம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்க்கு எதிராக திருநெல்வேலியில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்ட அவதூறு சுவரொட்டிகளை அக்கட்சியினா் அகற்றினா். திருநெல்வேலி மாநகா் மற்றும் புறநகா் பகுதிகளில் ... மேலும் பார்க்க