செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூா் விவாதம்: ஒத்துழைக்க மறுக்கும் எதிா்க்கட்சிகள்: மத்திய அரசு குற்றச்சாட்டு; காங்கிரஸ் பதிலடி

post image

புது தில்லி: நாடாளுமன்றத்தில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ‘ஆபரேஷன் சிந்தூா்’ குறித்த விவாதம் நடத்த எதிா்க்கட்சிகள் ஒத்துழைக்க மறுத்து ‘துரோகம்’ செய்வதாக மத்திய அரசு கடும் குற்றம்சாட்டியது. இதற்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.

இதுதொடா்பாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், ‘பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூா் ராணுவ நடவடிக்கை குறித்து மக்களவையில் விவாதம் தொடங்கப்படுவதற்கு சில நிமிஷங்களுக்கு முன்னதாக, எதிா்க்கட்சிகள் ஒரு நிபந்தனை விதித்தது.

ஆபரேஷன் சிந்தூா் குறித்த விவாதம் முடிவடைந்ததும், பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் உத்தரவாதம் கேட்டனா்.

நாடாளுமன்றம் விதிகளின்படி செயல்படுகின்றன. முதலில் ஒப்புக்கொண்ட விவாதத்திலிருந்து எதிா்க்கட்சிகள் பின்வாங்கி, தற்போது நிபந்தனைகள் விதிக்கின்றன. ஆபரேஷன் சிந்தூா் குறித்த விவாதத்திலிருந்து தப்பியோட எதிா்க்கட்சிகள் வழிகளைத் தேடுகின்றன’ என்று குற்றஞ்சாட்டினாா்.

காங்கிரஸ் பதிலடி:

இக்குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்து காங்கிரஸ் மக்களவைக் குழு துணைத் தலைவா் கௌரவ் கோகோய் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘அவையில் காலைமுதல் நடந்த சம்பவங்கள், அரசு விவாதம் நடத்த விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூா் ராணுவ நடவடிக்கையின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிப்படுத்த மத்திய அரசு விரும்பவில்லை’ என்று தெரிவித்தாா்.

டிரம்ப் முன் மோடியின் 56 இன்ச் மார்பு 36 இன்ச்சாக சுருங்குகிறது! திரிணமூல் எம்பி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்பு பிரதமர் நரேந்திர மோடியின் 56 இன்ச் மார்பு 36 இன்ச்சாக சுருங்குவதாக திரிணமூல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.மக்களவையில் ஆபரேஷன் சிந்... மேலும் பார்க்க

லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து: கன்வாரியா பக்தர்கள் 18 பேர் பலி!

ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரில் சிலிண்டர் லாரி மீது பாதயாத்திரை பேருந்து மோதியதில் கன்வாரியா பக்தர்கள் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.18 killed as bus carrying kanwariyas collides with truck in Jharkhan... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தாக்குதலில் பலியோனோரின் 22 குழந்தைகளைத் தத்தெடுக்கும் ராகுல்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் பெற்றோர்களை இழந்த 22 குழந்தைகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தத்தெடுக்கவுள்ளார்.பஹல்காம் தாக்குதலுக்கு பதில... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூர்’: மக்களவையில் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!

‘ஆபரேஷன் சிந்தூர்’ விவாதத்தில் இன்று மாலை பிரதமர் மோடி உரையாற்றவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.நாடாளுமன்றத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மத்திய உ... மேலும் பார்க்க

கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து

கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையையேமன் அதிகாரிகள் நிரந்தரமாக ரத்து செய்துள்ளதாக இந்திய கிராண்ட் முப்தி காந்தபுரம் அபுபக்கர் முஸலியார் அலுவலகம் தெரிவித்துள்ளது.Nimisha Priya's death sentenc... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு 95 லட்சம் சுற்றுலாவாசிகள் பயணம்

புது தில்லி: நிகழாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை, ஜம்மு-காஷ்மீருக்கு 95 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியா்களும், 19,570 வெளிநாட்டவரும் சுற்றுலா சென்றுள்ளனா்.கடந்த ஏப்.22-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பக... மேலும் பார்க்க